அல்ட்ரா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தை வாங்கிய ஹீரோ மோட்டோ கார்ப்

பிரிட்டனை சேர்ந்த அல்ட்ரா மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது.
இந்த நிலையில், எதிர்கால சந்தை தேவையை கருத்தில்க்கொண்டும், தனது சர்வதேச வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும் அல்ட்ரா மோட்டார்ஸ் நிறுவனத்தை ஹீரோ மோட்டோ கார்ப் வாங்கியுள்ளது.
இதன்மூலம், எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், மேற்கத்திய சந்தையில் தனது சந்தை விரிவாக்கத்தை எளிதாக மேற்கொள்ளவும் ஹீரோ திட்டமிட்டுள்ளது.
எலக்ட்ரிக் பைக் தயாரிப்புக்காக ஹீரோ ஈக்கோ என்ற துணை பிராண்டையும் ஹீரோ மோட்டோ கார்ப் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிராண்டின் மூலம் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்யவும் ஹீரோ மோட்டோ கார்ப் முடிவு செய்துள்ளது.
தவிர, மேற்கத்திய சந்தைக்காக ரூ.450 கோடியை முதலீடு செய்யவும் ஹீரோ மோட்டோ கார்ப் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








