சென்னையில் புதிய மோட்டார்சைக்கிள் ஆலை அமைக்கும் யமஹா

சென்னை அருகில் வல்லம்-வடகல் தொழிற் பூங்காவில் இந்த புதிய தொழிற்சாலை அமைய இருக்கிறது. 4,44,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்த புதிய தொழிற்சாலையில் வரும் 2014ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்படும்.
முதலில் ஆண்டுக்கு 4 லட்சம் மோட்டார்சைக்கிள் தயாரிக்கும் திறனை பெற்றதாக அமையும் இந்த தொழிற்சாலை அடுத்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு 18 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மேம்படுத்தப்படும்.
இந்த தொழிற்சாலையில் நேரடியாக 3000 பேருக்கும், மறைமுகமாக 20,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது உத்தரபிரதேச மாநிலம், சர்ஜாப்பூரில் இருக்கும் தொழிற்சாலையைவிட இந்த புதிய தொழிற்சாலையின் உற்பத்தி திறன் அதிகம் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








