மஹிந்திரா செஞ்சூரோவுக்கு இதுவரை 35,000 பேர் முன்பதிவு
இருசக்கர வாகன மார்க்கெட்டில் இதுவரை இல்லாத புதுமையான வசதிகளுடன் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட் செஞ்சூரோ மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கிறது.
விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து இதுவரை மஹிந்திரா செஞ்சூரோவுக்கு 35,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். எதிர்பாராத வகையில் செஞ்சூரோவுக்கு கிடைத்த வரவேற்பு மஹிந்திராவை திக்குமுக்காட வைத்துள்ளது.

மார்க்கெட்டில் நிலவும் அதிகப்படியான தேவையை கருத்தில்கொண்டு செஞ்சூரோவின் உற்பத்தியை மஹிந்திரா கூட்டியுள்ளது.
செஞ்சூரோ கொடுத்த உந்துதலால் மஹிந்திரா இருசக்கர வாகனப் பிரிவின் விற்பனை கடந்த மாதம் 66 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் 17,719 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக மஹிந்திரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், உள்நாட்டில் மட்டும் 15,346 இருசக்கர வாகனங்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








