பெரும் திட்டத்துடன் இந்தியாவில் களமிறங்கும் டிரையம்ஃப்!
இந்தியாவில் பெரும் திட்டத்துடன் இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் கால் பதிக்க உள்ளது. வரும் செப்டம்பரில் தனது பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது.
முதலில் பெங்களூர் அருகே நரசபுரா தொழிற்பேட்டையில் ஆலை அமைக்க திட்டமிட்டது. ஆனால், தற்போது மானேசரில் புதிய அசெம்பிளிங் ஆலையை திறந்து பைக் உற்பத்தியை துவங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, நரசபுரா ஆலையை 2015ம் ஆண்டில் திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, விரைவில் செய்தியாளர் சந்திப்பில் தகவல்கள் வெளியிடப்படும் என அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்ட்ரீட் டிரிப்பிள் 675, போனிவிலி, டேடோனா 675, ஸ்பீடு டிரிப்பிள், டைகர் 800எக்ஸ்சி, ராக்கெட் 3 மற்றும் ஸ்டோர்ம் ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதே மாடல்களை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிரையம்ஃப் களமிறக்க இருக்கும் பைக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

டேடோனா 675

டேடோனா 675

போனிவிலி

போனிவிலி

ராக்கெட் 3 ரோட்ஸ்டெர்

ராக்கெட் 3 ரோட்ஸ்டெர்

ஸ்பீடு டிரிப்பிள்

ஸ்பீடு டிரிப்பிள்

ஸ்டோர்ம்

ஸ்டோர்ம்

ஸ்ட்ரீட் டிரிப்பிள்

ஸ்ட்ரீட் டிரிப்பிள்

டைகர் 800 எக்ஸ்சி



Click it and Unblock the Notifications








