பைக் விலையை பல்க்காக உயர்த்திய தயாரிப்பாளர்கள்
பண்டிகை காலம் களைகட்டியுள்ள நிலையில், இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
ரூபாய் மதிப்பின் நிலையையும், உற்பத்தி செலவீனம் கூடுதலாகியிருப்பதையும் காரணம் காட்டி கார்களின் விலையை தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து உயர்த்தி வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது இருசக்கர வாகன தயாரிப்பாளர்களும் இணைந்து கொண்டுள்ளனர். பைக், ஸ்கூட்டர்களின் விலையை ரூ.160 முதல் ரூ.5,000 வரை உயர்த்தியுள்ளனர்.
இது பண்டிகை காலத்தில் இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.500 முதல் ரூ.1,000 வரையிலும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ரூ.500 முதல் ரூ.5,000 வரையிலும் விலையை உயர்த்தியுள்ளன. டாப் பட்டியலில் இருக்கும் ஹோண்டா நிறுவனம் இதுவரை விலை உயர்வு பற்றி வாய் திறக்கவில்லை.
யமஹா நிறுவனம் ரூ.160 முதல் ரூ.400 வரை உயர்த்தியுள்ளது. கடந்த மாதம் விற்பனை நன்கு வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், கையோடு விலை உயர்வை அறிவித்துள்ளன முன்னணி நிறுவனங்கள்.


Click it and Unblock the Notifications








