ரூ.400 கோடியில் புனேயில் அமைகிறது பெனெல்லி பைக் ஆலை!
புனே அருகில் பெனெல்லி பைக்குகளுக்கான புதிய ஆலையை டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம் அமைக்க இருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பைக் நிறுவனம், இந்தியாவின் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது பிரிமியம் பைக்குகளை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

இந்தநிலையில், போட்டியாளர்களை சமாளித்து சரியான விலையில், பெனெல்லி பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில், ரூ.400 கோடி முதலீட்டில் புதிய ஆலையை டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம் கட்டமைக்க உள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளில் இந்த புதிய ஆலை கட்டி முடிக்கப்பட்டு உற்பத்தி துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான விற்பை மட்டுமின்றி, ஆசிய பிராந்தியத்தில் இருக்கும் நாடுகளுக்கும் இங்கிருந்து பைக்குகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உள்ளது.


Click it and Unblock the Notifications








