இந்தியாவில் உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஆலை: ஹோண்டா அமைக்கிறது
ஹீரோவை பின்னுக்குத் தள்ளி நம்பர்-1 இடத்தை பிடிக்கும் விதமாக குஜராத் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஆலையை ஹோண்டா அமைக்க உள்ளது.
இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகர்ப்புறத்தில் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். இதனால், பைக் மார்க்கெட்டைவிட ஸ்கூட்டர் மார்க்கெட் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

தற்போது நம் நாட்டின் மொத்த இருசக்கர வாகன விற்பனையில் 27 சதவீதம் ஸ்கூட்டர்கள் விற்பனையாக உள்ளது. இந்த நிலையில், இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் ஹோண்டா நம்பர்- 1 இடத்தை நோக்கி காய் நகர்த்தி வருகிறது.
அந்த இடத்தை அடையும் விதமாக பல புதிய வர்த்த விரிவாக்கப் பணிகளை செய்து வருகிறது. அதன்படி, தனக்கு பலம் வாய்ந்த ஸ்கூட்டர் மார்க்கெட்டை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மேலும், ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல்களுக்கு இருக்கும் அதிகப்படியான தேவையை நிறைவு செய்யும் விதத்தில், குஜராத் மாநிலத்தில் மிக பிரம்மாண்டமான ஸ்கூட்டர் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ரூ.1,100 கோடி முதலீட்டில் ஆமதாபாத் நகர் அருகே இந்த புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது உலகின் அதிக உற்பத்தி திறன் கொண்ட ஸ்கூட்டர் ஆலையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








