இருசக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்ஸ்யூரன்ஸ்!
இருசக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர தேசிய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்(ஐஆர்டிஏ.,) முடிவு செய்துள்ளது.
தற்போது அனைத்து ரக வாகனங்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் வாகன இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இதனால், பல வாகன உரிமையாளர்கள் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிப்பதை தவற விடுகின்றனர். எனவே, வாகனங்களுக்கு நீண்ட கால இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை வழங்க ஐஆர்டிஏ பரிசீலித்து வருகிறது.
இதன்படி, மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்ஸ்யூரன்ஸ் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐஆர்டிஏ முடிவு செய்துள்ளது.
மேலும், இந்த திட்டத்தில் மூன்றாம் நபர் காப்பீட்டையும் சேர்த்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், வாகனம் மோதி இழப்பை சந்திப்பவர்களுக்கும் காப்பீடு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








