சென்னை யமஹா ஆலையில் முதலாவதாக ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்தி!

By Saravana

சென்னையில் அமைக்கப்பட்டு வரும் யமஹா நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகன ஆலையில் முதலாவது மாடலாக ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா இந்தியாவில் மூன்றாவது இருசக்கர வாகன ஆலையை அமைத்து வருகிறது. இந்த புதிய ஆலை சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது.

Yamaha Alpha

வரும் நவம்பர் மாதம் முதல் இந்த புதிய ஆலையில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த புதிய யமஹா ஆலையில் முதலாவதாக, ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

சூரஜ்பூரில் உள்ள ஆலையில் ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தென் இந்திய மார்க்கெட்டுக்கு ஏதுவாக சென்னை ஆலையிலும் ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.

மேலும், சூரஜ்பூரில் உள்ள ஆலையை போன்றே சென்னை ஆலையிலும் ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்திப் பிரிவில் பெண் பணியாளர்களை நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்ட பின்னர் யமஹா நிறுவனத்தின் மொத்த உற்பத்தி ஆண்டுக்கு 3 மில்லியன் என்ற அளவில் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2014, 13:29 [IST]
English summary
Yamaha Motors upcoming new manufacturing plant at Chennai, that will go on stream this November, will likely begin production with the Alpha scooter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+