சென்னை யமஹா ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்குகிறது!
சென்னை அருகே அமைக்கப்பட்டிருக்கும் புதிய யமஹா இருசக்கர வாகன ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் பரீதாபாத் மற்றும் சூரஜ்பூர் ஆகிய இடங்களில் யமஹா நிறுவனத்தின் இருசக்கர வாகன ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகல் பகுதியில் புதிய இருசக்கர வாகன ஆலையை யமஹா அமைத்துள்ளது.

ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஆலையில் ஆண்டுக்கு 4.50 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். வரும் 2018ம் ஆண்டு முதல் இந்த ஆலை முழு உற்பத்தி திறன் கொண்டதாக செயல்பட துவங்கும்.
இந்த புதிய ஆலையில் இருசக்கர வாகன உற்பத்தி துவங்குவதன் மூலம் யமஹா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








