ஐடர் மோட்டார்ஸ் ஒரு டுபாக்கூர் நிறுவனம்: தலைவர் அதிரடி கைது!
ஹைதராபாத்தை சேர்ந்த ஐடர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மொரஜு சிவகுமார் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். 2014ம் ஆண்டில் 4 எலக்ட்ரிக் பைக்குகளும், 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் ஐடர் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.
மேலும், இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலையும் அறிமுகம் செய்தது. ரூ.3.5 லட்சத்தில் வரும் என்று தெரிவிக்கப்பட்டதால், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்கள் ஹரியானா மாநிலம், ஹயாத் நகர் தாலுக்காவில் உள்ள பெட்டா அம்பர்பேசட் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஐடர் மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட பலர் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில், டீலர்ஷிப் அமைப்பதற்காக டெபாசிட் கட்டி உரிமத்தை பெற்று டீலர்ஷிப்பையும் அமைத்துள்ளனர்.

இதையடுத்து, ஐடர் மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட பலர் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில், டீலர்ஷிப் அமைப்பதற்காக டெபாசிட் கட்டி உரிமத்தை பெற்று டீலர்ஷிப்பையும் அமைத்துள்ளனர்.

இந்தநிலையில், இருசக்கர வாகனங்களை ஐடர் மோட்டார்ஸ் சப்ளை செய்யாமல் இழுத்தடித்துள்ளது. இதையடுத்து, டீலர்கள் ஹைதராபாத் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்த போலீசார், மோசடி வழக்குப் பதிவு செய்து ஐடர் மோட்டார்ஸ் தலைவர் மொரஜு ஷிவகுமாரை கைது செய்தனர்.

டீலர்களிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.10 கோடி வரை பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், முறையான உரிமங்கள் மற்றும் அனுமதியை ஐடர் மோட்டார்ஸ் பெறவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஐடர் மோட்டார்ஸ் மீது இதுவரை 60 புகார்கள் வந்துள்ளதாகவும் ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!


Click it and Unblock the Notifications








