லோஹியா ஆட்டோவின் நரைன் இ-ரிக்ஷாக்கள் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

லோஹியா ஆட்டோ நிறுவனம், நரைன் எலக்ட்ரிக் பாஸஞ்ஜர் மற்றும் கார்கோ இ-ரிக்ஷாக்களை அறிமுகம் செய்துள்ளது.

நரைன் எலக்ட்ரிக் பாஸஞ்ஜர் மற்றும் கார்கோ ரிக்ஷாக்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

நரைன் ரிக்ஷா...

நரைன் ரிக்ஷா...

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் லோஹியா ஆட்டோ நிறுவனம், பயணியர் (பாஸஞ்ஜர்) இ-ரிக்ஷா, நரைன் என்ற பெயரிலும், கார்கோ இ-ரிக்ஷாவை நரைன் எல்சி என்ற பெயரிலும் அறிமுகம் செய்துள்ளது. வேறு சில மாடல்கள் உருவாக்கபட்டு வருகிறது.

இந்த நரைன் இ-ரிக்ஷாக்கள் இந்திய சாலைகளில் போக்குவரத்து மற்றும் அதன் ஸ்டைலை மாற்றும் வகையில் அமைக்கபட்டுள்ளது.

பயணியர் இ-ரிக்ஷா;

பயணியர் இ-ரிக்ஷா;

நரைன் இ-ரிக்ஷா, 1950 வாட் எலக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது. மேலும், உயர்திறன் மிக்க பேட்டரி கெப்பாசிட்டி கொண்டுள்ளது.

சிங்கிள் சார்ஜ் மூலம், நரைன் இ-ரிக்ஷா 100 கிலோமீட்டர் செல்லும் திறன் உடையதாக உள்ளது. உச்சபட்சமாக, இது 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

நரைன் இ-ரிக்ஷா, 2040 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் உடையதாக உள்ளது.

இந்த இ-ரிக்ஷா-வில் 4 பயணியர்கள் சவுகரியமாக அமர்ந்து செல்ல முடியும். நல்ல இட வசதி கொண்ட இது, அதிக அளவிலான லெக்ரூம் வசதியும் கொண்டுள்ளது.

கார்கோ இ-ரிக்ஷா;

கார்கோ இ-ரிக்ஷா;

நரைன் எல்சி என்று அழைக்கப்படும் கார்கோ இ-ரிக்ஷா, சிலிண்டர், கார்டன் பாக்ஸ்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்லகூடியதாக இருக்கும். இதை, ஐஸ் கிரீம் கடை போன்றும் மாற்றி கொள்ளலாம்.

நரைன் எல்சி கார்கோ இ-ரிக்ஷா, நரைன் இ-ரிக்ஷா போன்றே ஒரே மாதிரியான தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஸ்போக்குகளால் ஆன இந்த நரைன் எல்சி கார்கோ இ-ரிக்ஷாவில், சமமான எடை பகிர்மானத்தை உறுதி செய்து, அனைத்து நிலப்பரப்புகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த நரைன் எல்சி கார்கோ இ-ரிக்ஷா, மாசு உமிழ்வை வெகுவாக குறைத்துவிடும். அதுவும் மாசு உமிழ்வு அதிகம் உள்ள நகரங்களுக்கு, இது மிகவும் உபயோகமானதாக உள்ளது.

இந்த நரைன் இ-ரிக்ஷாவில் இருந்து சத்தம் பிரச்னை இல்லை, மாசு உமிழ்வு பிரச்னை இல்லை. இதற்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் அவசியம் இல்லை.

மேலும், இந்த இ-ரிக்ஷா, 2 வருட வாரண்டியுடன் வெளியாகிறது.

சிஇஓ கருத்து;

சிஇஓ கருத்து;

லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான ஆயுஷ் லோஹியா, இந்த இ-ரிக்ஷா வாகனங்களின் அறிமுகம் குறித்து மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

இது குறித்து மேலும் கூறுகையில், நரைன் இ-ரிக்ஷா மூலம், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் எலக்ட்ரிக் வெஹிகிள் புரட்சி கொண்டு வருவதே நோக்கமாக உள்ளது. இதற்காக, நாங்கள் டீலர்ஷிப் (ஷோரூம்) நெட்வர்க்கை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

சிக்கலற்ற வாகன உரிமை கொண்டாட்டத்திற்கும், இனிமையான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் நரைன் இ-ரிக்ஷா 2-வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. லோஹியா ஆட்டோ மட்டும் தான், எலக்ட்ரிக் இ-ரிக்ஷா மீது 2-வருட வாரண்டி வழங்கும் ஒரே நிறுவனமாக உள்ளது" என ஆயுஷ் லோஹியா தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 16, 2016, 7:12 [IST]
English summary
Lohia Auto Industries has launched electric rickshaws in India, which is called by name 'Narain'. Lohia Auto is bringing two models to start with - Passenger Electric rickshaws is called as Narain and Cargo E-Rickshaws is called as Narain LC. Narain e-rickshaws are powered by 1950 watt electric motor. On single charge, passenger e-rickshaw can run for 100 kms. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+