Just In
- 35 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 1 hr ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிஎஸ்ஏ பைக் தயாரிக்கும் பணிகள் குறித்து ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட உற்சாக அறிவிப்பு..!!
பிஎஸ்ஏ பைக் தயாரிக்கும் பணிகள் குறித்து ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட உற்சாக அறிவிப்பு..!!
பிரிட்டனின் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான பிஎஸ்ஏ நிறுவனத்தை, இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் 2016ல் கைப்பற்றியது.
அது முதலே இந்திய ஆட்டோ துறையினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த பிஎஸ்ஏ பைக்குகள், எப்போது தயாரிக்கப்படும் என்பதை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தற்போது தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுயிருந்தார். அதில் அவர்,
"சான்டா கிளாஸ் பயணம் செய்யும் பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும். பழைய பைக்கில் இருந்த அனைத்து அம்சங்களும் புதிய மாடலிலும் இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர மஹிந்திரா தயாரிக்கும் புதிய பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் குறித்து எந்த தகவல்களையும் ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் குறிப்பிடவில்லை.
இருந்தாலும் அவரது இந்த அறிவிப்பே, இந்தியாவில் பிரபலமாகி வரும் மார்டன் கிளாசிக் பைக் செக்மென்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மஹிந்திரா முன்னதாக நோர்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்க தான் முயற்சித்து வந்தது.
அந்த டீல் எங்கெங்கோ சென்று பிறகு, ரூ. 28 கோடி மதிப்பில் மஹிந்திரா பிஎஸ்ஏ நிறுவனத்தை வாங்கும் நிலையில் நிறைவடைந்தது.
மஹிந்திராவின் துணை நிறுவனமன கிளாசிக் லெஜன்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிளின் மொத்த 100 சதவீத பங்குகளையும் மஹிந்திரா கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து இந்தியாவில் பிஎஸ்ஏ பைக்குகள் தயாரிக்கப்பட மாட்டாது எனவும், அதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான தருணம் தற்போது வரை இல்லை என்பதையும் மஹிந்திரா கூறியது.
பைக் தயாரிப்பிற்கான முக்கிய பிரிவுகளில், மோட்டார் சைக்கிள்களை உருவாக்கும் பல முக்கிய முடிவுகளை மஹிந்திரா ஏற்கனவே எடுத்திருந்தது.
அதற்கு அச்சாரமாக இருக்க அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ள பிராண்டுகள் தான் பிஎஸ்ஏ மற்றும் ஜாவா மோட்டோ.
பிஎஸ்ஏ போன்றில்லாமல், ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன, மேலும் ஜாவா பைக்குகள் 2018 முடிவில் இங்கு விற்பனைக்காக அறிமுகமாகும்.
இருசக்கர வாகன உற்பத்தியில் மஹிந்திரா வெளியிட்டுள்ள நிலைபாடு இந்தியா உட்பட பல நாடுகளில் வாகன துறையை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மஹிந்திரா தயாரிக்கும் பைக்குகள் மோஜோ என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதுவே அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் மஹிந்திரா பைக் விற்பனைக்காக புதிய யுக்திகளை கையாள உள்ளது.
கடந்த ஒராண்டாக எதிர்பார்க்கப்பட்டு வந்த பிஎஸ்ஏ பைக்குகள் தயாரிப்பு பற்றி மஹிந்திரா மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கிளாசிக் பைக் ஆர்வலர்களுக்கு உற்சாகமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் மார்டன் கிளாசிக் பைக் செக்மென்ட் ஏற்கனவே பிரலமாக தொடங்கிவிட்டது. அதற்கு ராயல் என்ஃபீல்டு, டிரையம்ப், டுகாட்டி, பிஎம்டபுள்யூ மற்றும் நோர்டன் போன்ற நிறுவனங்கள் முக்கிய காரணிகளாக உள்ளன.