Just In
- 44 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கவர்ந்திழுக்கும் நிறத்தில் வெளிவரும் புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர்...!!
கவர்ந்திழுக்கும் நிறத்தில் வெளிவரும் புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர்...!!
இத்தாலியை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா எல்லாருக்கும் ஏற்ற எஸ்.ஆர் 150 மாடல் ஸ்கூட்டரை இந்தியாவில் 2016ல் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
அப்போது முதலே இது எப்போது விற்பனைக்கு வரும் என இந்திய வாடிக்கையாளர்கள் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர் இன்னும் பலவித நிறங்களில் கிடைக்கும் என்று தகவல் முன்னரே இருந்தன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, புதிய வண்ணம் கொண்ட அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரை பூனேவில் உள்ள விற்பனையாளரிடம் இருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டில் விற்பனையாகும் மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றாக உள்ள அப்ரிலியாவின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரேஸ் எடிஷன் இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியானது.
அழகியல் சார்ந்த மற்றும் செயல்திறனில் கூடுதல் தன்மை கொண்ட இந்த ஸ்கூட்டர் விரைவில் மீண்டும் ஒரு அப்டேட் பெற இருக்கிறது.
அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டரில் புதிய நிறத்தில் வெளிவருவது குறித்து ஜிக்வீல்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது இந்த மாடலில் நான்கு புதிய நிறங்களில் வெளியிடப்பட இருக்கிறது.
Recommended Video
புதிய அப்ரிலியா மெட்டாலிக் கிரீன், மெட்டாலிக் சில்வர், மெட்டாலிக் லைட் புளூ மற்றும் மெட்டாலிக் டார்க் புளூ நிறங்களில் வெளியாகும்.
குறிப்பாக இந்த புதிய மாடல்களில் கிராஃபி்க்ஸ் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது எனவும் அப்ரிலியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது விற்பனையாகி வரும் எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர் மேட் பிளாக் மற்றும் கிளாசி வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
தற்போது அப்ரிலியா வெளியிட்டுள்ள தகவலின் படி எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரில் வழங்கப்படும் கூடுதல் நிறங்களால், இந்தியாவில் இதனுடைய விற்பனை மேலும் அதிகரிக்கும்.
குறிப்பாக நிறங்களை தவிர வடிவம் மற்றும் கிராபிக்ஸ் அம்சங்களில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்பது அப்ரிலியா நிறுவனத்துக்கு பலமாகவே அமையும்.
154.8 சிசி எஞ்சின் கொண்ட அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர் 10.25 பிஎச்பி பவர் மற்றும் 11.40 என்.எம் டார்க் திறனை வழங்கும்.
ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புற சக்கரத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் உள்ளது.
மேலும் பிரேக் தேவைகளில் முன்சக்கரத்தில் 220 மிமீ ட்வின்-பிஸ்டன் கேலிப்பர் டிஸ்க் மற்றும், ரியரில் 140 மிமீ டிரம் பிரேக் செட்டப் உள்ளது.