இருசக்கர வாகன உலகில் ஆதிக்கம் செலுத்துமா தானியங்கி ஸ்கூட்டர்கள்..?
தன்னிநிலை இயக்கம் பெற்ற ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை ஆவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2017 ஏப்ரல் நிதிநிலை ஆண்டில் ஹோண்டாவின் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவின் இருச்சக்கர வாகன சந்தையை ஒரு கலக்கு கலக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

2016 ஏப்ரல் முதல் 2017 ஏப்ரல் வரை தன்னிநிலை இயக்கம் பெற்ற 3,68,550 அளவிலான ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்றுள்ளது.

இதனால் இந்தியாவில் 25 சதவீதமாக இருந்த தானியங்கி ஸ்கூட்டர்களின் விற்பனை தற்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் இதே நிலையை அடுத்த நிதிநிலை ஆண்டு வரை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு திட்டங்களுடன் ஹோண்டா இயங்கி வருகிறது.

ஒட்டுமொத்தமாக மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தானியங்கி ஸ்கூட்டர்களுக்கான விற்பனை சந்தையில் ஹோண்டாவின் பங்கு மட்டும் 63%.

மேலும் இதற்கான டீலர்களை பெறுவதிலும் கடந்தாண்டில் ஹோண்டா திறம்பட செயல்பட்டுள்ளது.
பி.எஸ்.4 எஞ்சினுக்கான அறிவிப்பு வெளியான பின்னரும் கூட ஹோண்டாவின் விற்பனை ஆட்டம் காணாமல் இருந்துள்ளது.

இரு சக்கர வாகன சந்தையில் தானியங்கி ஸ்கூட்டர்களுக்கான விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உள்ளது.

ஏப்ரல் 2017ம் ஆண்டு வரை 25 சதவீத விற்பனையை இந்த ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன.
மொத்த இருசக்கர விற்பனையோடு ஒப்பிட்டு பார்த்தால் தானியங்கி ஸ்கூட்டர்கள் 35 சதவீத விற்பனையை 2017 ஏப்ரல் வரை பெற்றுள்ளன.

ஹோண்டா இந்தியாவின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் தலைவரான யாத்விந்தர் சிங் குலேரியா "தானியங்கி ஸ்கூட்டர்களை 2001ம் ஆண்டுமுதல் ஹோண்டா தயாரித்து வருகிறது. தற்போது அதற்கான பாதைகளை அதிகப்படுத்தி, இந்த துறை சார்ந்த ஸ்கூட்டர் தயாரிப்பில் ஹோண்டா முன்னிலை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்தார்.

தானியங்கி ஸ்கூட்டர்களுக்கான விற்பனை கடந்த ஆறு ஆண்டுகளை காட்டிலும் 35 சதவீதம் கடந்த நிதியாண்டில் அதிகரித்துள்ளது.

மேலும் இதே நிதியாண்டில் 110சிசி திறனில் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கான விற்பனை 49 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக குறைந்ததுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் இந்த விற்பனைக்கு திறனுக்கு காரணம் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்ததே என்ற காரணமும் ஆட்டோமொபைல் உலகில் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








