Just In
- 34 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 2 hrs ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
சென்னையில் உள்ள பெரும்பாலான டீலர்களில் பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.
பிஎஸ்-3 வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, இருப்பில் இருந்த பிஎஸ்-3 வாகனங்களுக்கு வரலாறு காணாத வகையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று மாலையில் இருந்து பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டினர்.
இருசக்கர வாகன ஷோரூம்களில் கூட்டம் அலை மோதியது. இதனால், சென்னையில் உள்ள பல இருசக்கர வாகன ஷோரூம்கள் இரவு வரை திறந்திருந்தது.
தள்ளுபடி செய்தி காட்டுத் தீயாக பரவியதால், இன்று காலையிலேயே ஷோரூம் திறப்பதற்கு முன்னரே, வாடிக்கையாளர்கள் குவியத் துவங்கினர். முன்பதிவு செய்வதிலும் போட்டா போட்டி நிலவியது.
இந்தநிலையில், இன்று மதிய நிலவரப்படி, சென்னையில் உள்ள பெரும்பாலான இருசக்கர வாகன டீலர்களில் பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.
இந்த தகவலை தாமதமாக கேள்விப்பட்டு, பல வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு டீலராக ஏறி இறங்கி வருகின்றனர். இருப்பினும், ஸ்டாக் இல்லை என்ற பதிலை கேட்டு அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஹீரோ, ஹோண்டா, பஜாஜ் போன்ற முன்னணி இருசக்கர வாகன ஷோரூம்களில் ஸ்டாக் இல்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், மஹிந்திரா நிறுவன உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து இருப்பில் உள்ள பிஎஸ்-3 பைக்குகளுக்கு தள்ளுபடியை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
டீலர்களில் மோஜோ பைக்குகள் தேங்கி இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்குவதாக இன்று பிற்பகலில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதேபோன்று, சில இருசக்கர வாகன ஷோரூம்களில் இருப்பில் உள்ள பிஎஸ்-3 வாகனங்களுக்கு அதிகபட்ச சலுகைகள் பெறும் வாய்ப்பு இருந்து வருகிறது.
நாளை முதல் பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ இயலும். அதேநேரத்தில், இன்று வாங்கிய பிஎஸ்-3 வாகனத்தை அடுத்த 60 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
இதனிடையே, பிஎஸ்-3 வாகனங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையானது, முறையானது அல்ல; துரதிருஷ்டவசமானது என்று வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்தள்ளது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!