யமஹா ஃபேசினாவிற்கு போட்டியாக 125சிசி திறனில் புதிய ஸ்கூட்டரை களமிறக்கும் ஹீரோ..!!
யமஹா ஃபேசினாவிற்கு போட்டியாக 125சிசி திறனில் புதிய ஸ்கூட்டரை களமிறக்கும் ஹீரோ..!!
இந்தியாவில் ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் அடுத்தடுத்த தனது புதிய மாடல்களை வெளியிட தீவிரமாகி வருகிறது.

ஏற்கனவே பேஷன் எக்ஸ் பிரோ 110 மோட்டார் சைக்கிளை வெளியிடுவதற்கான அறிவிப்பை ஹீரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 25சிசி திறன் கொண்ட புதிய ஸ்கூட்டரை வரும் டிசம்பர் 18ம் தேதி ஹீரோ வெளியிடுவதாக காடிவாடி இணையதளம் தகவல் தெரிவிக்கிறது.

இந்த அறிவிப்புப்படி, ஹீரோவின் 125சிசி புதிய ஸ்கூட்டர், பியாஜியோ வெஸ்பா மற்றும் யமஹா ஃபேசினாவிற்கு போட்டியாக இருக்கும் என்பது தெளிவாகிறது.

இந்தியளவில் பயணிகள் ரக மோட்டார் சைக்கிள் விற்பனையில் ஹீரோ நிறுவனம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள பல்வேறு யுக்திகளை அந்நிறுவனம் கையாண்டு வருகிறது.

குறிப்பாக பயணிகள் ரக வாகன விற்பனையில் டிவிஎஸ், ஹோண்டா, சுஸுகி உருவாக்கும் வாகனங்களுக்கு போட்டியாக ஹீரோவின் தயாரிப்புகள் அமைகிறது.
Recommended Video


ஹீரோவிற்கு வரவேற்பு கிடைத்து வரும் இந்த செக்மென்டில் தற்போதைய தேவைகளையும் தாண்டி புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு அதன் தயாரிப்புகள் அமைகின்றன.

ஹீரோ மோட்டோகார்ப்பின் 125சிசி ஸ்கூட்டர் ரெட்ரோ-ஸ்டைலில் வடிவமைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தற்போது ரெட்ரோ-ஸ்டைல் வடிவமைப்புகளுக்கு இந்தியாவில் வரவேற்பு கூடி வருவதால், இந்த முடிவை ஹீரோ எடுத்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் படி ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டர், நகர பகுதி வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் தயாராகவுள்ளது.

தற்போது இதே பிரிவில், நகரவாசிகளுக்கு மேஸ்ட்ரோ எட்ஜ், டூயட் மற்றும் பிளஷர் ஸ்கூட்டர்களை இந்தியாவில் ஹீரோ விற்பனை செய்து வருகிறது.

125சிசி திறன் பெற்ற இந்த ஸ்கூட்டருக்கான தொழில்நுட்ப தகவல்களை பற்றி இதுவரை ஹீரோ வெளியிடவில்லை.
வெஸ்பாவிற்கு போட்டியான தயாரிப்பில், அதற்கு ஏற்றார் போன்ற விலையில் ஹீரோவின் புதிய ஸ்கூட்டர் தயாராகவுள்ளது.

பயணிகள் ரக வாகன விற்பனையில் ஹோண்டாவின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் கிங். இதற்கு சரி போட்டியாக ஹீரோவின் இந்த புதிய ஸ்கூட்டர் இருக்கும்.

ஆண்கள், பெண்கள் என எல்லாருக்கும் ஏற்ற மாடலில் வெளிவரும் இந்த ஸ்கூட்டர், இளைஞர்களை குறிவைக்கும் விதத்திலான அம்சங்களை பெற்றிருக்கும்.

ஹீரோவின் இந்த புதிய 125சிசி ஸ்கூட்டரில் இருக்கும் தயாரிப்புகள், அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகள் அனைத்தும், இந்த செக்மென்டில் புதுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பயணிகள் ரக வாகன விற்பனையில், ஹீரோவிற்கு இருக்கும் தகுதியை நிலைநிறுத்திக்கொள்ள இந்த புதிய ஸ்கூட்டருக்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹீரோவின் இந்த புதிய ஸ்கூட்டருக்கு எக்ஸ்-ஷோரூம் மதிப்புப்படி ரூ.60,000 விலையில் வெளிவரலாம் என்று தெரிகிறது.
உற்பத்தி பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் 2018 ஜனவரி முதல் ஹீரோவின் புதிய 125சிசி ஸ்கூட்டருக்கான டெலிவெரி தொடங்கும்.

வெளியீட்டு விற்பனைக்கு பிறகு கிடைக்கும் முடிவுகளை வைத்து, புதிய 125சிசி திறன் பெற்ற ஸ்கூட்டரை ஹீரோ 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








