விற்பனையில் சாதனை படைத்த ஹோண்டா நவிக்கு இந்தியாவில் இறங்கு முகம் ஆரம்பம்..!!
இந்திய சாலைகளுக்காக தயாரிக்கப்பட்ட ஹோண்டா நவி பைக்குகளின் விற்பனை திறன் இந்தியாவில் குறைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மோட்டார் சைக்கிள் போன்ற தோற்றத்துடன், ஸ்கூட்டருக்கான திறனுடன் 2016ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டா நவி.

இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே தயாராகி, இந்தியாவிற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹோண்டா நவி.

100சிசி திறனுடன் தயாரிக்கப்படும் இந்த நவி பைக்குகளில் மேலும் கிரோம் எடிசன் மற்றும் அட்வெஞ்சர் எடிசன் என இரண்டு மாடல்களை ஹோண்டா வெளியிட்டது.

ஹோண்டா நவி பைக்குகள் வந்த பிறகு, ஆண்களுக்கு சமமாக பெண்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது வந்தது.

பல்வேறு கார்பிரேட் நிறுவனங்களால் பைக் ஆஃப் தி இயர் என்ற விருதுகளை வாங்கி குவித்த ஹோண்டா நவியின் விற்பனை இந்தியாவில் குறைந்து வருகிறது.

அறிமுகமான மார்ச் 2016 முதல் மார்ச் 2017 வரை கிட்டத்தட்ட 60,000 நவி பைக்குகள் விற்பனையாயின.
இதனால் ஹோண்டா, கூடுதலாக 50,000 நவி பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டது.

ஆனால் 2017ல் ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரை 2000 எண்ணிக்கையில் நவி பைக்குகள் குறைவாக விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது மாதத்தில் 300 அளவிலான பைக்குகள் குறைந்து விற்பனை ஆகி வந்துள்ளன.

இதனால் ஹோண்டா நிறுவனத்திற்கு இதுவரை வாடிக்கையாளர்களின் வரவேற்பிற்குரிய மாடலாக இருந்த நவி பைக்குகளுக்கான மதிப்பு குறைந்து வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இருந்தாலும், நவி பைக்குகளுக்கான விற்பனையை பொருத்தவரை, அது ஹோண்டாவிற்கு லாபமாகத்தான் அமைந்துள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.

மேலும், இந்தியாவில் நவி பைக்குகளின் விற்பனையில் தேக்கம் அடைந்திருந்தாலும் அதற்கான வரவேற்பு இன்னும் இந்தியாவில் நிலையுடன் தான் இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








