கொல்கத்தா போலீசாருக்கு ஹார்லி டேவிட்சன் பைக்குகளை வழங்கிய மேற்கு வங்க அரசு... தமிழகத்திற்கு எப்போது?
கொல்கத்தா போலீசாருக்கு ஹார்லி டேவிட்சன் பைக்குகளை வழங்கிய மேற்கு வங்க அரசு... தமிழகத்திற்கு எப்போது..??
இன்றைய தேதியில் இந்தியாவில் விலை உயர்ந்த பைக் மாடலை வைத்திருக்கும் போலீஸ் கொல்கத்தா காவல் துறை தான்.

கடந்த சுதந்திர தினத்தன்று கொல்கத்தாவை சேர்ந்த ஒரு சில அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு ஒரு சிலருக்கு ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 மாடல் பைக்குகளை வழங்கியுள்ளது.

இந்திய மதிப்பில் ரூ.5.5 லட்சம் விலை பெறும் இந்த மாடல் பைக்கில் சுமார் 5 பைக்குகள் மட்டுமே கொல்கத்தா காவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.

தினசரி பயன்பாட்டிற்கு என்றில்லாமல், அலுவல் மற்றும் அதி முக்கிய தேவைகளுக்கு மட்டுமே ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 மாடல் பைக் பயன்படுத்தப்படும் என கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, காவல் துறை வாகனமாக களமிறங்கியுள்ள ஸ்டீரிட் 750 மாடல் பைக் காவல்துறைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

பைக்குகளை பெற்றுக்கொண்ட கொல்கத்தா காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர், ஹார்லி டேவிட்சன் போலீசார் பயன்பாட்டிற்கு வந்திருப்பது மகிழ்ச்சி எனவும்,

இதைப்பெற்ற பின் இந்த பைக்கில் வரும் காவலர்களை பெருமிதத்துடன் பார்ப்பதாகவும் ஸ்டீரிட் 750 மாடல் பைக்குகளை வாங்கிய போலீசார் கருத்து தெரிவித்தனர்.
Recommended Video


கொல்கத்தா போலீசாருக்கு அலுவல் தேவை பயன்பாட்டிற்காக தற்போது ராயல் என்ஃபீல்டு மாடல் பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

350சிசி திறன் கொண்ட அந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகள் முழு பயன்பாட்டிற்கு என்று இருந்தாலும் ஹார்லி டேவிட்சன் ஒரு பெரிய தகுதியான வாகனம் என்று கூறுகிறார் கொல்கத்தா நகர ஆணையர் ராஜீவ் குமார்.

கொல்கத்தா போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் 750 மாடல் பைக்கில் காற்றால் குளிர்வடையும் 749சிசி திறன் கொண்ட வி-ட்வின் எஞ்சின் உள்ளது.

இது 3750 ஆர்.பி.எம்-ல் 59 என்.எம் டார்க் திறனை தர வல்லது. எஞ்சின் திறனை சக்கரங்களுக்கு கடத்த இந்த மாடல் பைக்கில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

முன்னரே குறிப்பிட்டது போல இந்த பைக் நகர ரோந்து பணிகள் அல்லது போலீசாரின் தினசரி தேவைகளுக்காக பயன்படுத்துவதில்லை.

கார்னிவல், பரேட் அல்லது முக்கியஸ்தர்களின் வருகையின் போது ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 பைக் பயன்படுத்தப்படும் என கொல்கத்தா போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

மேற்கு வங்க அரசு இந்த பைக்குகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே வாங்கி விட்டது. ஆனால் கடந்த சுதந்திர தினத்தின் போது தான் இந்த பைக்கை பெறக்கூடிய காவல்துறை உட்பட பொதுமக்களு காட்சிப்படுத்தப்பட்டது.

ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 பைக்குகளை பெற்ற கொல்கத்தா போலீசார் அடுத்த வரவுள்ள துர்கா பூஜாவின் போது இந்த பைக் முதன் முதலாக நகர உலாவிற்காக பயன்படுத்துவர் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








