பைக் விற்பனையில் பேரிழப்பு... தொடக்க நிலை சந்தையில் இருந்து மஹிந்திரா வெளியேற்றம்..!!
பைக் விற்பனையில் பேரிழப்பு... தொடக்க நிலை சந்தையில் இருந்து மஹிந்திரா வெளியேற்றம்..!!
மஹிந்திரா & மஹிந்திராவின் இருசக்கர வகான பிரிவு தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால் தொடக்க நிலை சந்தையில் இருந்து அந்நிறுவனம் வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2008ல் கைனட்டிக் பிராண்டை கைப்பற்றிய மஹிந்திரா கார் தயாரிப்பு நிறுவனம், பைக் பிரிவிற்கான சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது.

மஹிந்திராவின் இருசக்கர வாகன தயாரிப்புகள் ஸ்கூட்டர் மற்றும் வாகனங்களுக்கான சந்தையில் ஓரளவு வரவேற்பு பெற்றாலும், அவை நஷ்டத்திலே இயங்கி வந்தது.

2008-க்கு பிறகு 9 ஆண்டுகளாக மஹிந்திராவின் இருசக்கர வாகன பிரிவு தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறது.

இதனால் அந்நிறுவனம் தொடக்கநிலை சந்தையில் இருந்து வெளியேறுவதாக மணிகன்ட்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை ஒப்பீட்டளவில் மஹிந்திராவின் இருசக்கர வாகன பிரிவு கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.476 கோடி வரை இழப்பீட்டை சந்தித்துள்ளதாக மணிகன்ட்ரோல் கூறுகிறது.

தொடக்க நிலை சந்தையில் அறிமுகமான டியூரோ, ரோடியா, கஸட்டோ போன்ற ஸ்கூட்டர்கள் மஹிந்திராவிற்கு பெரியளவில் ஆதரவினை பெற்று தரவில்லை.

அடுத்ததாக ப்ரீமியம் ரக சந்தையில் மஹிந்திரா வெளியிட்ட ஸ்போர்டிவ் டூரர் மஹிந்திரா மோஜோ சிறப்பான வரவேற்பை பெற்றது.

இருந்து தொடக்க நிலை சந்தையில் மஹிந்திரா கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையொலான காலகட்டத்தில் 77% வருமான இழப்பை அடைந்ததுள்ளது.

இதுகுறித்து சியாம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்த வாகன விற்பனையில் மஹிந்திரா இருசக்கர நிறுவனத்தின் பங்கு 0.09 சதவீத பங்களிப்பு மட்டுமே.

இதனால் மஹிந்திரா தொடக்கநிலை சந்தையை புறக்கணித்து விட்டு, 300சிசி-க்கு மேற்பட்ட பிரிவொல் ஜாவா மற்றும் மோஜோ உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன்காரணமாக அடுத்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஜாவா யெஸ்டி பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது மஹிந்திரா.


Click it and Unblock the Notifications








