Just In
- 18 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தமிழகத்தில் யமஹா, ஹீரோ, டிவிஎஸ் வாகனங்களுக்கான பதிவு நிறுத்திவைப்பு; காரணம் என்ன?
பி.எஸ்.4 எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கான முறையாக ஆவணங்களை சமர்பிக்காததால்,சில முன்னணி நிறுவனங்களின் இருச்சக்கர வாகனங்களுகான பதிவு தமிழகளவில் நிறுத்தி வைக்கபட்டுள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் யமஹா, ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்களின் இருச்சக்கர வாகனங்களுக்கான பதிவிடும் பணி கடந்த 17ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கே இனி அனுமதி வழங்கப்படும் என்ற மத்தியரசின் உத்தரவை அடுத்து, தற்போது நாட்டிலுள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் பி.எஸ்.4 எஞ்சின் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன.
பி.எஸ்.3 வாகனங்களுக்கான தடை உத்தரவை உச்சநீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, கடந்த 1ம் தேதி முதல் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களின் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பி.எஸ்.4 எஞ்சின் கொண்ட வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி முதல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் யமஹா, டி.வி.எஸ், ஹீரோ ஆகிய நிறுவனங்களின் இருச்சக்கர வாகனங்களை பதிவு செய்யும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான காரணத்தை ஆராய்ந்து போது, ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு யமஹா, ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்கள் பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட தங்களது வாகனங்களை குறித்த ஆவணங்களை சரியாக சமர்பிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனாலேயே அந்நிறுவனங்களின் இருச்சக்கர வாகன பதிவுகளை தமிழகளவில் தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
யமஹா, ஹீரோ மற்றும் டி.வி.எஸ் நிறுவனங்களின் பி.எஸ்.4 மற்றும் பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்கள் என்ன? அதை வேறுபடுத்தி காட்டுவதற்கான நடைமுறைகள் என்ன? என்பன போன்ற தகவல்கள் எதுவும் இதுவரை ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு கொடுக்கப்படவில்லை.
உச்சநீதி மன்றம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கு தடை விதித்ததை அடுத்து, மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்திலுள்ள அனைத்து ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் பி.எஸ்.3 மற்றும் பி.எஸ் 4 எஞ்சின் கொண்ட அனைத்து ரக வாகனங்களும் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் உத்தரவு வெளியாகியும், சில ஆவணங்களை முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் சமர்பிக்காததால் தமிழகளவில் குறிப்பிட்ட அந்த நிறுவனங்களின் இருச்சக்கர வாகனங்களை பதிவு செய்யும் பணியினை எந்தவித முன்னறிவிப்புமின்றி அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
வாகனப் பதிவுகள் நிறுத்தி வைத்ததை அடுத்து, யமஹா நிறுவனம் முறையான ஆவணங்களை ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு அளிக்க போக்குவரத்து துறை அமைச்சரை அனுகியுள்ளது.
ஆனால் பஜாஜ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் முன்னரே தங்களது பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களின் செயல்பாடுகளுக்கான ஆவணங்களை முறையாக அளித்ததை அடுத்து அந்நிறுவனங்கள் வாகனப் பதிவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
இருப்பினும் மதுரை, கோயமுத்தூர் போன்ற பகுதிகளின் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் அனைத்து இருச்சக்கர வாகனங்களுக்குமான பதிவு செய்யும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பி.எஸ்.4 எஞ்சின் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெளியான பின்னர், சென்னை மாநகரத்தில் இதுவரை யமஹா, டி.வி.எஸ், ஹீரோ நிறுவனங்களின் ஒரு வாகனம் கூட பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.டி.ஓ அதிகாரிகளிடம் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை களைய யமஹா தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. விரைவில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் தகவல் மற்றும் உத்தரவாதங்கள் விளக்கப்பட்டு யமஹா நிறுவனத்தின் பைக்குகள், ஸ்கூட்டர்களுக்கான பதிவு செய்யும் பணி இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவுத் தலைவர் ராய் குரியன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!