”இப்போதைக்கு ஏபிஎஸ் கொண்ட பைக்குகளை தயாரிக்கும் எண்ணம் இல்லை...” யமஹா அதிரடி..!!
”இப்போதைக்கு ஏபிஎஸ் கொண்ட பைக்குகளை தயாரிக்கும் எண்ணம் இல்லை...” யமஹா அதிரடி..!!
யமஹா நிறுவனம் இந்தியாவில் ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட பைக்குகளை 2019ம் ஆண்டு முதல் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2018 முதல் 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் அமைப்பு இடம்பெறுவது கட்டாயம் என மத்திய அரசு 2016 ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இதனால் அடுத்தடுத்து வெளியான பல்வேறு இருசக்கர வாகனங்கள் 2018க்கு முன்னரே ஏபிஎஸ் அமைப்புடன் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

யமஹா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ஃபேஸர் 25 மாடல் பைக்கில் ஏபிஎஸ் வசதி இல்லை. மேலும் அது ஆப்ஷனாலக்கூட இந்த பைக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஃப்.இசட் 25 பைக்கின் எஞ்சின், கேஸில், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைக்கொண்டு தான் புதிய ஃபேஸர் 25 மாடலை யமஹா நிறுவனம் தயாரித்துள்ளது.
Recommended Video


யமஹா ஃபேஸர் 25 பைக்கை அறிமுகப்படுத்தி பேசிய அந்நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் மற்றும் விற்பனை சந்தைப்படுத்துதல் துறை அதிகாரியான ராய் குரியன்,

அவசர தருணங்களில் சரியாக இயங்ககூடிய பிரேக்குகள் அமைப்பைக்கொண்டு தான் யமஹா ஃபேஸர் 25 உருவாக்கபட்டுள்ளது. மேலும் ஏபிஎஸ் பிரேக்குகளை பைக்குகளில் இடம்பெறச்செய்யும் சட்டம் கட்டாயமாக்கப்பட்ட பின்புதான் அதுபோன்ற பைக்குகளை யமஹா தயாரிக்கும் என்றார் அவர்.

யமஹா நிறுவனம் நடுத்தர எடைக்கொண்ட மாடல் பைக்குகளில் கடைசியாக வெளியிட்ட மாடல் ஒய்.இசட்.எஃப்- ஆர்3 பைக். 2015ல் வெளியிடப்பட்ட இதில் 320சிசி திறன் பெற்ற எஞ்சின் உள்ளது.

ட்வின் சிலிண்டர் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட மாடல் என ஒய்.இசட்.எஃப்- ஆர்3 பைக்கை யமஹா கம்பீரத்தோடு இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தாலும், அது ஏனோ விற்பனையில் சொதப்பியது.

தற்போது வெளிவரும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 2004வி மற்றும் பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்.200 போன்ற 200சிசி எஞ்சின் திறன் கொண்ட பைக் மாடல்களில் ஏபிஎஸ் தொழில்நுடம் இடம்பெற்றுள்ளது.

யமஹா தெரிவித்துள்ள காலவரையின் படி ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட பைக்குகளை இன்னும் 2 வருட கால இடைவெளிகளுக்கு பின்னரே அந்நிறுவனம் வெளியிடுகிறது.

அப்படி என்றால், யமஹாவின் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் இதற்கு இசைவார்களா என்று தெரியவில்லை. இது மிகவும் குழப்பமான முடிவு.

வாகன சட்டங்களை தொடர்ந்து இந்திய அரசு கடுமையாக்கிக்கொண்ட வருகிறது. 2018 வரை என்பது ஒரு காலவரை தான். அது இடைவெளி இல்லை. இதை யமஹா புரிந்துக்கொள்வது எப்போது..?


Click it and Unblock the Notifications








