விமானத்தில் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க எமர்ஜென்ஸி கதவை திறந்த பயணி அடுத்து நடந்து என்ன?
விமானத்தில் காற்று வரவில்லை என எமர்ஜென்ஸி கதவை திறந்த பயணியால் மற்ற பயணிகள் அலறியனர். விமானியின் சாதூரியத்தால் விமானம் தப்பியது. விமானம் பறக்கும் போது எமர்ஜென்ஸி கதவை திறந்தால் என்ன ஆகும் தெரியுமா?
விமானத்தில் காற்று வரவில்லை என எமர்ஜென்ஸி கதவை திறந்த பயணியால் மற்ற பயணிகள் அலறியனர். விமானியின் சாதூரியத்தால் விமானம் தப்பியது. விமானம் பறக்கும் போது எமர்ஜென்ஸி கதவை திறந்தால் என்ன ஆகும் தெரியுமா?

சீனாவில் உள்ள நான்ஜியோவில் இருந்து சானியா செல்லும் விமானத்தில் விமானம் டேக் ஆப் ஆக நகர்ந்து கொண்டிருக்கையில் அந்த விமானத்தில் இருந்த சென் என்ற பயணி விமானத்தில் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்குவதற்காக எமர்ஜென்சி கதவை திறந்து விட்டார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்து பயணிகள் எல்லோரும் அலறினர். தெடர்ந்து விமானி சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.

இதையடுத்து அந்த சென் என்ற பயணியை விமான நிலைய போலீசார் கைது செய்து மியாங்க் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சென் என்ற பயணியை 15 நாட்கள் சிறையில் வைத்துள்ளனர்.

மேலும் விமான பாகங்களை சேதப்படுத்தியதற்காக அவருக்கு இந்திய மதிப்பில் ரூ 7 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது இந்த செய்கையால் சுமார் இந்திய மதிப்பில் சுமார் ரூ 10.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரனையில சென் தெரிவித்ததாவது : "விமானத்திற்குள் அதிக புழுக்கமாகவும், சூடாகவும் இருந்தது. என் அருகே இருந்த கைப்பிடியை இழுத்து பார்த்தேன். அதை இழுத்தால் எமர்ஜென்ஸி கதவு திறக்கும் என எனக்கு தெரியாது.

கைப்பிடியை இழுத்ததும் கதவு திறந்ததையடுத்து அதிர்ச்சியடைந்து விட்டேன். பெரும் விபத்து ஏற்படபோகிறது என்று நினைத்து பதறிவிட்டேன். " இவ்வாறு கூறினார்.

இச்சம்பவத்தால் பல விமானத்தில் சுமார் 1 மணி நேரம் வரை தாமதாக புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் விமானத்தில் போதிய காற்று இல்லை என் பயணி ஒருவர் இது மாதிரியான சம்பவத்தில் ஈடுபடுவது இது தான் முதன் முறை

ஒருவேளை விமானம் பறக்கும் போது இந்த எமர்ஜென்ஸி கதவை திறப்பதால் என்ன நடக்கும் என்பதை கீழே பார்ப்போம்.

விமானம் பறக்கும் போது விமானத்திற்கு உள்ளேயும் விமானத்தின் உள்ள பிரஷரின் அளவு மாறுபடும். விமானத்திற்கு உள்ளே இருந்து விமானத்தின் ஒவ்வொரு சதுர இன்ச் பகுதியிலும் சுமார் 36 கிலோ எடை அளவுவிற்கு ஏர் பிரஷர் இருக்கும்.

மனிதர்களால் ஒரு சதுர இன்சிற்கு ஒரு கிலோ ஏர் பிரஷர் மட்டுமே தாங்க முடியும். மிக அதிகமாக பிரஷர் இருப்பதன் காரணமாக விமானம் பறக்கும் போது எமர்ஜென்ஸி கதவை திறப்பது என்பது முடியாத காரியம்.

சில ஸ்கை டைவிங் செய்யுபவர்கள் செல்லும் விமானங்களில் இந்த கேட்கள் ஹைட்ராலிக் ஜாக் கொண்டு திறக்கப்படுகிறது. விமானம் பறக்கும் போது எமர்ஜென்ஸி கதவு திறக்கப்பட்டால் பிரஷர் அளவு மாறுபடும். இதை சமாளிக்க சதூர்யமான விமானிகளால் மட்டுமே முடியும்.

விமானம் பறக்கும் போது பிரஷ் கதவு திறக்கப்படால் அது விமான வெடித்து சிதறும் வாய்ப்பை கூட ஏற்படுத்தும். விமானம் பறக்கும் போது எமர்ஜென்ஸி டோரின் பிடியை திறந்தாலும், அல்லது மற்ற பாகங்கை உடைக்க முயற்சி செய்தாலும் அது அலாரத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் என விமான ஊழியர்களை எச்சரித்து விடும். மேலும் பயணிகளுக்க ஆக்ஷிஜன் மாஸ்க் வந்து விடும்.

விமானத்தின் பொது தேவையில்லாமல் எமர்ஜென்ஸி கதவை திறப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம். நீங்கள் எக்காரணத்தை கொண்டும் தேவையில்லாமல் எமர்ஜென்ஸி கதவை திறக்க முற்படாதீர்கள். அதற்கான பலனை நீங்கள் பின்னர் அனுபவிக்க நேரிடுவதோடு மற்ற பயணிகளின் உயிரையும் பணயம் வைக்கும் செயல் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications








