விரைவில் வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள்கள்: ஆனந்த் மஹிந்திரா சூசகம்!!
ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சூசகமாக தெரிவித்துள்ளார். இது ஜாவா பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹ
ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சூசகமாக தெரிவித்துள்ளார்.

உலகின் பாரம்பரியம் மிக்க ஜாவா மற்றும் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனங்களை கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரைவேட் லிமிடேட் என்ற தனது கீழ் செயல்படும் துணை நிறுவனம் மூலமாக மஹிந்திரா கையகப்படுத்தியது.

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மஹிந்திரா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்தது. அத்துடன், ஜாவா மோட்டார்சைக்கிள்கள் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார். இது இந்திய ஜாவா பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இருசக்கர வாகன மார்க்கெட்டில் சற்று பின்னடவை சந்தித்து வரும் மஹிந்திரா மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு ஜாவா பிராண்டு மூலமாக புது எழுச்சி கிடைக்கும். அத்துடன், மஹிந்திரா மோஜோ பைக்கில் பயன்படுத்தப்படும் எஞ்சினை ஜாவா பிராண்டிலும் பயன்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஜாவா 350 ஸ்பெஷல் மாடர்ன் கஃபே ரேஸர், ஜாவா 350 ஓஎச்சி ஆகிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஜாவா பிராண்டில் மேலும் பல புதிய மாடல்களை களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, டீலர்ஷிப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








