Just In
- 3 min ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!
2014-ல் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனமும், இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பைக் தயாரிப்பு நிறுவனமும் கூட்டணி அமைத்து இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கின. பெனெல்லி பைக்குகளுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிட
டிஎஸ்கே மோட்டோவீல்ஸ்- பெனெல்லி பைக் நிறுவனம் இடையிலான கூட்டணி முறிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
2014ம் ஆண்டு மஹாராஷ்டிராவை சேர்ந்த டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனமும், இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பைக் தயாரிப்பு நிறுவனமும் கூட்டணி அமைத்து இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கின. டிஎஸ்கே நிறுவனம் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களின் டீலர்ஷிப்பையும், ஹையோசங் பைக்குளின் வினியோகஸ்தராகவும் செயல்பட்டு வந்தது. ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டு இருந்தது.
இந்த நிலையில், புதிய கூட்டணி மூலமாக பெனெல்லி பைக் உற்பத்தி, டீலர்ஷிப் மற்றும் சர்வீஸ் சேவைகளை டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. பெனெல்லி பைக்குகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த கூட்டணியின் வர்த்தகம் சிறப்பாக அமைந்தது. நாடுமுழுவதும் 25 நகரங்களில் டீலர்ஷிப்புகள் செயல்பட்டு வருகின்றன.
பெனெல்லி டிஎன்டி 25, பெனெல்லி டிஎன்டி 300, 302ஆர், டிஎன்டி 600 ஜிடி, டிஎன்டி 600ஐ, டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி ஆர் உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்களை இந்த கூட்டணி விற்பனை செய்து வந்தது. இதில், பிஎஸ்-4 மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி ஆர் பைக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன.
விரைவில் லியான்சினோ ஸ்க்ராம்ப்ளர், டிஆர்கே 502 உள்ளிட்ட நடுத்தர ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டிருந்தன. இதில், டிஆர்கே 502 அட்வென்ச்சர் ரக பைக் என்பதுடன், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாடலாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் குல்கர்னி மோசடி புகாரில் சிக்கியிருப்பதாலும், ரியல் எஸ்டேட் துறையில் பெரும் பொருளாதார பிரச்னையை சந்தித்துள்ளது. இதையடுத்து, டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடனான உறவை பெனெல்லி நிறுவனம் முறித்துக் கொண்டுள்ளது.
மேலும், ஹைதராபாத்திற்கு தலைமையிடத்தை மாற்றி இருக்கும் பெனெல்லி, அந்நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மஹாவீர் குழுமத்துடன் கூட்டணி அமைத்து வர்த்தகத்தை தொடர இருக்கிறது. ஹைதராபாத்தை சேர்ந்த மஹாவீர் குழுமம் வாகன டீலர்ஷிப்பில் பிரபலமான நிறுவனம். மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா, இசுஸூ மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டீலராக செயல்பட்டு வருகிறது. ஹைதராபாத், விஜயவாடாவில் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன.
டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்ததுடன் பெனெல்லி கூட்டணி முறிந்ததால், இந்தியாவில் பெனெல்லி பைக்குகளை வாங்கிய உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் குறித்து உரிமையாளர்களிடத்தில் அச்சம் எழுந்தது. ஆனால், மஹாவீர் நிறுவனம் கூடிய விரைவில் டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
மேலும், டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் கூட்டணி முறிந்துள்ளதால், பெனெல்லி பைக்குகள் அசெம்பிள் செய்யும் பணிகளும் முடங்கி இருக்கிறது. இந்த நிலையில், பெனெல்லி பைக்குகளை அசெம்பிள் செய்வதற்கான ஆலையையும் திறப்பதற்கு மஹாவீர் குழுமம் திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தில் இந்த ஆலையை திறக்கவும் முடிவு செய்துள்ளது.
இதனால், பெனெல்லி பைக் உரிமையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்ற ஆறுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து அனைத்து வித சேவைகளையும் மஹாவீர் குழுமத்தின் கூட்டணியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு பெனெல்லி திட்டமிட்டுள்ளது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!