Just In
- 25 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 36 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நெல்லை பெட்ரோல் பங்க்கில் தீப்பற்றி எரிந்த வாலிபர்.. பைக்கில் தீ பிடித்ததால் விபரீதம்.. பகீர் வீடியோ
நெல்லை அருகே உள்ள பங்க்கில் பெட்ரோல் நிரப்பும்போது, பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. பைக்கில் அமர்ந்திருந்த வாலிபர் மீதும் தீ பரவியது.
நெல்லை அருகே உள்ள பங்க்கில் பெட்ரோல் நிரப்பும்போது, பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. பைக்கில் அமர்ந்திருந்த வாலிபர் மீதும் தீ பரவியது. அதிர்ச்சிகரமான இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நெல்லை மாவட்டம் முருகன்குறிச்சி பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆல்வின் என்ற இளைஞர், இரு சக்கர வாகனத்தில் இந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்றார். பின்னர் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினார்.
இதன்படி பங்க் ஊழியர் பெட்ரோலை நிரப்பி முடித்தார். இதன்பின் புறப்பட ஆயத்தமான ஆல்வின், இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது, திடீரென தீ பற்றியது. இரு சக்கர வாகனத்தின் டேங்க் பகுதியில் பற்றிய தீ கண்ணிமைக்கும் நேரத்தில் ஆல்வின் மீதும் பரவியது.
இதனால் இரு சக்கர வாகனத்தை அப்படியே போட்டு விட்டு ஆல்வின் கீழே இறங்கி ஓடினார். அவர் அலறியடித்து கொண்டு ஓடியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, தீயணைப்பான் உதவியுடன் உடனடியாக தீயை அணைத்து விட்டனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும் ஏசியாநெட் நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஆல்வினுக்கு 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
திடீரென எப்படி தீ பற்றியது? என்பதற்கான உறுதியான காரணம் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. ஆனால் பங்க் ஊழியர் பெட்ரோல் நிரம்பும்போது, டேங்க் நிரம்பிவிட்டது. அப்போது பெட்ரோல் வெளியே வழிந்ததில், ஆல்வினின் ஆடைகளும் நனைந்து விட்டன.
அவர் அப்படியே இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயன்றபோதுதான் தீ பற்றியுள்ளது. அத்துடன் ஆல்வின் மீதும் தீ பரவி விட்டது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். பெட்ரோல் பங்க்கில் தீ விபத்து ஏற்பட்ட அதிர்ச்சிகரமான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ஆல்வின் மீது தீப்பற்றியதற்கு என்ன காரணம்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில்தான் உறுதியான காரணம் தெரிய வரும்.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?