Just In
- 48 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹெல்மெட் தடை உத்தரவை வாபஸ் வாங்கியது பெங்களூர் போலீஸ்!
வரும் 1ந் தேதி முதல் ஐஎஸ்ஐ அல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை பெங்களூர் போலீசார் வாபஸ் பெற்றுள்ளனர்.
Recommended Video
போலி ஹெல்மெட்டுகளை ஒழிக்கும் முயற்சியில் பெங்களூர் போக்குவரத்து போலீசார் கடந்த சில வாரங்களாக தீவிரம் காட்டி வந்தனர். ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 1ந் தேதி முதல் ஐஎஸ்ஐ முத்திரை தவிர்த்து பிற அனைத்து ஹெல்மெட்டுகளுக்கும் தடை விதிப்பதாக அறிவித்தது. DOT, ECE மற்றும் SNELL தரச் சான்று பெற்ற உயர்தர ஹெல்மெட்டுகளை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. இறக்குமதி செய்யப்பட்ட உயர் வகை ஹெல்மெட்டுகளை வைத்திருந்த வாகன ஓட்டிகளிடையே குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
|
உரிய விளக்கம் அளிக்குமாறு சமூக வலைதளங்களிலும் பெங்களூர் போலீசாருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதனால், தடையை அமல்படுத்துவதில் பெங்களூர் போலீசாருக்கே குழப்பம் உண்டானது. இதுதொடர்பாக, போக்குவரத்துத் துறை மற்றும் பிஐஎஸ் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த நிலையில், பிஐஎஸ் நிறுவனம் இதற்கு பதில் அளித்துள்ளது.
அதன்படி, எந்தவொரு ஹெல்மெட்டையும் கண்ணால் பார்த்து தரத்தை உறுதி செய்ய முடியாது என்று பிஐஎஸ் அமைப்பு தெரிவித்தது. மேலும், முறையான பரிசோதனைகள் மூலமாகவே ஹெல்மெட்டுகளின் தரத்தை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தது.
|
இதையடுத்து, வரும் 1ந் தேதி முதல் ஐஎஸ்ஐ அல்லாத பிற அனைத்து ஹெல்மெட்டுகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை பெங்களூர் போக்குவரத்து போலீசார் வாபஸ் வாங்கி இருக்கின்றனர்.
இதுதொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், ஹெல்மெட்டுகளின் தரத்தை களப்பணியில் உள்ள போலீசார் உறுதி செய்வது இயலாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. போலி ஹெல்மெட்டுகள் குறித்து சந்தேகம் எழுந்தால், பிஐஎஸ் நிறுவனத்திற்கு அனுப்பி சோதனை செய்தபிறகே உறுதி செய்து அபராதம் விதிக்க முடியும்.
எனவே, இந்த தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், தரமான ஹெல்மெட்டுகளை பயன்படுத்துமாறும் வாகன ஓட்டிகளை பெங்களூர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த அறிவிப்பால் ஹெல்மெட்டுகள் பயன்படுத்துவது குறித்து வாகன ஓட்டிகளிடையே இருந்து வந்த குழப்பம் நீங்கி இருக்கிறது.
Source: The Hindu
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!