Just In
- 33 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹோண்டா என்எச்எஃப் 250ஆர் மோட்டோ3 பைக் இந்தியா வருகிறது!!
ஹோண்டா என்எஸ்எஃப் 250ஆர் ரேஸ் பைக்குகளை வைத்து புதிய பைக் பந்தயங்களையும் நடத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இளம் பைக் பந்தய வீரர்களுக்கு இந்த பைக் பந்தயமும், இந்த பைக்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும்
மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கான சந்தை என்ற பிம்பத்தை இந்தியா மெல்ல உடைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பிரிமியம் பைக்குகளுக்கான மார்க்கெட் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தற்போது ரேஸ் பைக்குகளுக்கான வரவேற்பும், ஆதரமும் அதிகரித்து வருகிறது.
அண்மையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எச்பி4 ரேஸ் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த நிலையில், தற்போது ஹோண்டா நிறுவனமும் தனது என்எஸ்எஃப் 250ஆர் மோட்டோ3 ரேஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹோண்டா என்எஸ்எஃப் 250ஆர் ரேஸ் பைக்குகளை வைத்து புதிய பைக் பந்தயங்களையும் நடத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இளம் பைக் பந்தய வீரர்களுக்கு இந்த பைக் பந்தயமும், இந்த பைக்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.
இந்த ரேஸ்களில் திறமைமிக்க வீரர்களை இனம் கண்டு சர்வதேச அளவிலான கிரான்ட் பிரிக்ஸ் பைக் பந்தயங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக அமைய இருக்கிறது. இந்த பந்தயங்களுக்காக கொண்டு வரப்படும் ஹோண்டா என்எஸ்எஃப் 250ஆர் மோட்டோ3 பைக் மிக விசேஷமான வடிவமைப்பு தாத்பரியங்களை பெற்றிருக்கிறது.
இந்த பைக்கில் 249.3சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.6 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக் 80 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. ஹோண்டா ரேஸிங் கார்ப்பரேஷன் பிரிவு இந்த பைக்கை தயாரித்துள்ளது. இந்த பைக் ஹோண்டா ஆர்எஸ் 125ஆர் பைக்கிற்கு மாற்றாக வருகிறது.
சர்வதேச கிரான்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயங்களில் ஹோண்டா நிறுவனம் 750 வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில், தேசிய மற்றும் சர்வதேச கிரான்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயங்களில் பங்கேற்பதற்காக இந்தியா உள்ளிட்ட ஆசிய பிராந்திய அளவில் 3 அணிகளை ஹோண்டா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
முதலாவது ஹோண்டா ஏசியா ட்ரீம் அணியானது ஜப்பானில் நடைபெறும் சுஸுகா 8 ஹவர்ஸ் என்டியூரன்ஸ் ரேஸிலும், ஜேஎஸ்பி100 கிளாஸ் ரேஸ்களிலும் பங்கேற்கும். இரணடாவது அணியான இடிமிட்சு ஹோண்டா டீம் ஏசியா அணியானது மோட்டோ2 மற்றும் மோட்டோ3 கிளாஸ் எஃப்ஐஎம் ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிஃப் போட்டிகளில் பங்கேற்கும். இந்த அணியானது கிரான்ட் பிரிக்ஸ் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் விதமாக அமையும். மூன்றாவது அணியான ஹோண்டா இந்தியா ட்ரீம்ஸ் அணி, இந்தியா சார்பில் பங்கேற்கும் அணியாக இருக்கும்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2008ம் ஆண்டு முதலே இந்திய மோட்டார்ஸ்போர்ட் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. 2008ல் ஹோண்டா ஒன் மேக் ரேஸிங் சீரிஸ் போட்டிகளை துவங்கியது. இந்த நிலையில், அண்மையில் இளம் வீரர்களை இனம் காணும் விதத்தில் 'ஹோண்டா இந்தியா டேலன்ட் ஹன்ட்' என்ற முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம்களில் தேர்வு செய்யப்படும் இளம் வீரர்கள் ஹோண்டா ரேஸிங் அகடமி மூலமாக பயிற்சி கொடுக்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பர்
இந்த நிலையில், என்எஸ்எஃப் 250ஆர் மோட்டோ3 பைக்கை அடுத்த ஆண்டு இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும், இந்த பைக்குகளை வைத்து தேசிய அளவிலான புதிய பைக் பந்தயத்தையும் துவங்க இருக்கிறது. இந்த போட்டி மூலமாக, கிரான்ட் பிரிக்ஸ் போட்டிகளில் திறமையான இந்திய வீரர்கள் எளிதாக பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!