Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சாதனைப் பயணம் மேற்கொண்டவரின் கேடிஎம் பைக் தீயில் கருகி நாசம்!
தங்க நாற்கர சாலையை பைக்கில் அதிவேகத்தில் கடக்க முயன்றவர் சென்னை அருகே விபத்தில் சிக்கினார். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
உத்தரகாண்ட் மாநிலம், ரூர்கியை சேர்ந்தவர் சோனு என்கிற ரூபேஷ் பதுலா. இவர் ரூர்க்கியில் சோனு ஸ்பீட்ஸ்ட்ரைக்கர்ஸ் என்ற பைக் மாடிஃபிகேஷன் பட்டறையை நடத்தி வருகிறார். மேலும், இவர் பைக் பயணம் மேற்கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர்.
இந்த நிலையில், நாட்டின் அனைத்து திசைகளிலும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர சாலையை பைக்கில் அதிவேகத்தில் கடக்கும் முயற்சியை எடுத்தார். இதற்காக, தனது கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீகளை பொருத்தினார்.
லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் நோக்கில் பயணத்தை திட்டமிட்டார். அதன்படி, டெல்லியிலிருந்து புறப்பட்ட அவர் சென்னை நோக்கி தங்க நாற்கர சாலையில் பயணித்துள்ளார். சென்னையை நெருங்கிய அவர் நகரத்திற்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக விரைவாக கடப்பதற்கு திட்டமிட்டிருந்தார்.
இதற்காக, சென்னையை சேர்ந்த அருண் என்ற நண்பரின் வழிகாட்டுதலுடன் புறவழிச்சாலையில் பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, நாய் குறுக்கே வந்துள்ளது. நாய் மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாக பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவர் கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் சோனு சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். எனினும், அவரது கேடிஎம் ட்யூக் 390 பைக் கீழே விழுந்த வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டது.
பைக்கில் பொருத்தப்பட்டிருந்த கூடுதல் பெட்ரோல் கேன்கள் பைக் கீழே விழுந்தபோது, தரையில் உரசி தீப்பொறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், கேன்களில் இருந்த பெட்ரோல் எளிதாக தீப்பிடித்துக் கொண்டது. இந்த விபத்தில், பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. அதிலிருந்த சோனுவின் உடைமைகளும் தீக்கிரையாகின.
இந்த விபத்திற்கு அந்த பைக்கில் பொருத்தப்பட்டிருந்த கூடுதல் பெட்ரோல் கேன்கள் தரம் குறைவானதாக இருந்ததே காரணமாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற நீண்ட தூர பயணங்கள் செல்வோர் தரமான பெட்ரோல் கேன்களை வாங்கி பொருத்துவது அவசியம்.
அதேபோன்று, இந்தியா நெடுஞ்சாலைகளில் நாய், மாடு போன்ற விலங்குகளும், பாதசாரிகளும் சாலையை கடப்பது வாடிக்கையான விஷயம். எனவே, குடியிருப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் வேகத்தை குறைத்து நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.
பிரேக் பிடிக்கும்போதும் முன்சக்கர பிரேக்கை அதிக அளவு பிடிக்காமல் இரண்டு சக்கரங்களிலும் சீராக பிரேக் பிடிப்பதற்கு பழக வேண்டும். இப்போது பெரும்பாலான விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகள் பதட்டத்தில் முன்சக்கர பிரேக்கை வேகமாக பிடித்துவிடுவதும் காரணமாக இருக்கிறது.