Just In
- 3 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 3 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 4 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 4 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மோடியை கதற விடும் தமிழர்கள்.. பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால் இனி இந்தியா முழுவதும் இது நடக்கலாம்..
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் மற்றும் கிண்டலடிக்கும் வகையிலான தமிழர்களின் செயல்பாடுகள் நாட்டையே திரும்பி பார்க்க வைப்பதாக உள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் மற்றும் கிண்டலடிக்கும் வகையிலான தமிழர்களின் செயல்பாடுகள் நாட்டையே திரும்பி பார்க்க வைப்பதாக உள்ளன.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன.
இதுதவிர பெட்ரோல், டீசல் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் மிக அதிகமான வரிகளை விதித்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மிக அதிகப்படியான விலையில் விற்பனையாகி கொண்டிருப்பதற்கு இதுவும் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது தற்போது மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஏனெனில் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒரே ஒரு வரி மட்டுமே விதிக்கப்படும். எனவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தால், அதன் விலை லிட்டருக்கு 20-30 ரூபாய் வரை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை இழந்து விடக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் நினைக்கின்றன.
எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாமானிய மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீதுதான் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையானது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப முடியாததால் இனி சைக்கிளில்தான் பயணம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பேசி வருகின்றனர். இது தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலை தளங்களில் அதிகம் உலா வருகின்றன.
இந்த சூழலில் திருமண நிகழ்ச்சியின்போது, மாமனார் ஒருவர் தனது மருமகனுக்கு சைக்கிளை சீதனமாக வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார். நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோமல் என்ற கிராமத்தில் திருமணம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது மணப்பெண்ணின் தந்தை மேடை மீது ஏறினார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மணமகனுக்கு சைக்கிள் ஒன்றை அவர் சீதனமாக வழங்கினார். அப்போது மணப்பெண்ணின் உறவினர்களும் உடனிருந்தனர்.
இதுகுறித்து மணப்பெண் வீட்டார் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. எனவேதான் மணமகனுக்கு சைக்கிளை சீதனமாக வழங்கினோம். இதன்மூலம் பெட்ரோலுக்கான செலவை மிச்சம் பிடிக்கலாம்.
அத்துடன் தற்போது உடற்பயிற்சி செய்வதற்கு யாருக்கும் போதிய நேரம் இருப்பதில்லை. எனவே சைக்கிள் ஓட்டினால் உடற்பயிற்சி செய்தது போலவும் இருக்கும்'' என்றனர். மணமகனுக்கு சைக்கிள் சீதனமாக வழங்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் அடிக்கும் வகையிலான இத்தகைய வித்தியாசமான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டம் குமராட்சி என்ற இடத்தில், இளஞ்செழியன்-கனிமொழி ஆகியோரின் திருமணம், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த, மணமகன் இளஞ்செழியனின் நண்பர்கள் சிலர், 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக வழங்கினர்.
அந்த படங்களும் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவின. அதை வைத்து மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படுத்திய தாக்கமாகவே இந்த சம்பவங்கள் பார்க்கப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டலடிக்கும் வகையில் இது போன்ற வித்தியாசமான செயல்பாடுகள் இந்தியாவில் வேறு எங்கும் அவ்வளவாக நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களுக்குதான் குசும்பு அதிகம் போல!!
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!