ஆடுத்த 5 ஆண்டுகளில் 10-12 புதிய கார்கள்: டாடா
டாடா நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளாில் 10-12 பயணிகள் வாகனங்களை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை ஆல்ஃபா மற்றும் ஓமேகா ஆகிய பிளாட்பார்மில் தயாரிக்க திட்டமிட்ட
டாடா நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளாில் 10-12 பயணிகள் வாகனங்களை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை ஆல்ஃபா மற்றும் ஓமேகா ஆகிய பிளாட்பார்மில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவில் ஓடும் மற்ற 90 சதவீத பயணிகள் வாகனத்துடன் போட்டி போடும் அளவிற்கு சிறந்த கார்களை தயாரிக்க உதவும் என அந்நிறுவனம் கருதுகிறது.

இது குறித்து டாடா நிறுவன பயணிகள் வாகன வர்த்தக யூனிட் தலைவர் மாயங்க் பாரீக் கூறுகையில் :" அடுத்த 5 ஆண்டுகளில் டாடா நிறுவனம் பல செக்மெண்ட் மற்றும் சப் செக்மெண்ட்களிலும் கார்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இல்லாமல் புதிதாக சில செக்மெண்ட்களையும் அறிமுகப்படுத்தவுள்ளோம்.

தற்போது ஆல்ஃபா மற்றும் ஓமேகா ஆகிய 2 பிளாட்பார்ம்களையும் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 10-12 புதிய மாடல் கார்களை களம் இறக்கவுள்ளோம். இதில் பல்வேறு வேரியன்ட்களும் கிடைக்கும். அதாவது 10-12 புதிய பெயர்களில் கார்கள் வெளியாகும்." என கூறினார்.

டாடா நிறுவனம் தற்போது அதன் யுக்தியை மாற்ற முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக தங்களது பிளாட்பார்ம்களை 2 ஆக மாற்றியுள்ளனர். பயணிகள் வாகனத்தை பொருத்தவரை தற்போது டாடா நிறுவனம் 70 சதவீத மார்கெட் ஷேரை வைத்துள்ளது.

டாடா நிறுவனம் தற்போது 4.3 மீட்டர் அளவு கொண்ட கார்களை ஆல்ஃபா பிளாட்பார்மிலும், எஸ்யூவி ரக கார்களை ஓமேஹா பிளாட்பார்மிலும் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இதில் ஒமேஹா பிளாட்பார்ம் லேண்ட் ரோவர் கார் தயாரிக்கப்படும் பிளாட்பார்மை போன்றது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications