Just In
- 1 hr ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 1 hr ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 2 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 2 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய போதை வாலிபர்கள்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ
மதுரை அருகே குடிபோதையில் மூன்று வாலிபர்கள் பயணம் செய்த பைக், எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது. பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மதுரை அருகே குடிபோதையில் மூன்று வாலிபர்கள் பயணம் செய்த பைக், எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது. பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுசூதனன், சுகுமார், அர்ஜூன். இவர்கள் மூவரும் கடந்த 16ம் தேதி, மேலக்கல் அருகே உள்ள தேனூர் சந்திப்பு பகுதியில், பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இதில், மதுசூதனன்தான் பைக்கை ஓட்டி சென்றார்.
இரு சக்கர வாகனம் இருவருக்கு மட்டுமே என்பதை மறந்து, மூவரும் ஒரே பைக்கில் பயணம் செய்துள்ளனர். அத்துடன் யாரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. அத்துடன் தி நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள செய்தியின்படி மூவரும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மதுசூதனன் பைக்கை அதிவேகத்தில் ஓட்டி சென்றார். அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும்போது, திடீரென எதிரே அரசு பஸ் ஒன்று வந்தது. ஆனால் அதிவேகத்தில் வந்ததால், மதுசூதனனால் பைக்கை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக பஸ் மீது பைக் அதிவேகத்தில் மோதியதால், மூவரும் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு கீழே விழுந்தனர். ஆனால் பஸ் டிரைவர் நாகேந்திரன் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக பஸ்ஸை நிறுத்தி விட்டார். இல்லாவிட்டால் மூவர் மீதும் பஸ் ஏறியிருக்கும்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவ்வாறு நடக்கவில்லை. முன்னதாக அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டனர். அவர்கள் மூவருக்கும் தற்போது, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில், இந்த விபத்து பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சியை நீங்கள் கீழே காணலாம்.
உடனடியாக பஸ்ஸை நிறுத்தி டிரைவர் நாகேந்திரன் சாமர்த்தியமாக செயல்பட்டதாலேயே, மூவரும் தற்போது உயிர் பிழைத்துள்ளனர். இந்த பஸ் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து காடுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதனிடையே இந்த விபத்து குறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில், பஸ் டிரைவர் நாகேந்திரன் புகார் அளித்தார். இதன்பேரில், 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''விபத்தில் படுகாயம் அடைந்த மூவருக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அதிவேகத்தில் பயணம் செய்துள்ளனர். ஹெல்மெட்டும் அணியவில்லை.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் மதுசூதனனை கைது செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்பின் அவரிடம் விசாரணை நடத்தப்படும். ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த மற்ற இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.
இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சாலை விபத்துக்களினால் சராசரியாக 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.
மதுசூதனன், சுகுமார், அர்ஜூன் ஆகியோரும், போக்குவரத்து விதிகளை மீறிதான் பயணம் செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். ஆனால் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களே சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன.
-
73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!