Just In
- 4 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 34 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னை வாசிகளை குஷிபடுத்தும் வகையில், அதன் முதல் ஷோரூமை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், மின்வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது.
அந்தவகையில், அந்நிறுவனம் ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய இரு மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகின்றது.
அதேசமயம், இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், அந்நிறுவனம், முன்னதாக பெங்களூருவில் மட்டுமே விற்பனைச் செய்து வந்தது.
இந்த நிலையில், அதனை நாடு முழுவதும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சியில் ஏத்தர் ஈடுபட்டு வருகின்றது.
அதனடிப்படையில், முதல்முறையாக பெங்களூருவைத் தாண்டி அந்நிறுவனம் தமிழகத்தில் கால் தடம் பதிக்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது.
அதன் முயற்சியாக தலைநகர் சென்னையில், அதன் முதல் ஷோரூம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்பீரியன்ஸ் மையத்தை அது தொடங்கியுள்ளது.
அவ்வாறு, நுங்கம்பாக்கத்தில் உள்ள வாலஸ்கார்டன் பகுதியில்தான் அதன் முதல் ஷோரூம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஷோரூம் மூலமாகவே சென்னை வாசிகளுக்கு, அதன் இருமாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நிறுவனம் விற்பனைச் செய்ய இருக்கின்றது.
இதில், ஏத்தர் 350 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1,19,091 என்ற விலையிலும், 450 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1,31,683 என்ற விலையிலும் விற்பனைச் செய்யப்பட உள்ளது. இது, ஆன்ரோடு விலையாகும்.
அதேசமயம், இந்த விலைகள் மத்திய அரசின் ஃபேம்-2 மானியத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் விலையாகும். ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பெங்களூருவில் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வரை விலைக் குறைவாக விற்கப்படுகின்றது. இதற்கு, கர்நாடகா-தமிழ்நாடு இடையில் உள்ள விரி விதிப்பு வித்தியாசமே காரணமாக இருக்கின்றது.
விலை அதிகமாக இருந்தாலும், சென்னை வாசிகளைக் கவரும் விதமாக ஏத்தர் நிறுவனம் சில சலுகைகளை வழங்க முடிவெடுத்துள்ளது.
அந்தவகையில், இரு ஹெல்மெட்டுகள் இலவசம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அத்துடன், ஸ்கூட்டரின் விலையிலேயே இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றையும் அடக்கி விற்பனைச் செய்ய இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, சென்னை நகரின் முக்கிய பகுதிகளான ஷாப்பிங் காம்பளக்ஸ், சில குறிப்பிட்ட அலுவலகம், கஃபே பகுதி மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட சில இடங்களில் ஏத்தர் கிரிட் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களை வருகின்ற டிசம்பர் மாதம் வரை அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்துடன், சென்னை வாசிகள் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தும் திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது.
ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்னையை அடுத்து நாட்டின் பிற பகுதிகளான புனே, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது. அதனடிப்படையில், லத்தின் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
இவ்விரிவாக்கத்தைத் தொடர்ந்து, ஏத்தர் நிறுவனம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை பலமடங்கு உயர்த்த திட்டம் வகுத்து வருகின்றது. அந்தவகையில், ஆண்டொன்றிற்கு 1 மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயார் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.