Just In
- 37 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News நான் கொஞ்சம் பிசி.. இப்போதைக்கு நோ! பிரதமர் மோடி சந்திப்பை ஒத்தி வைத்த எலான் மஸ்க்! இதுதான் காரணமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்
சாலையில் ஓடி கொண்டிருந்த பைக் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே (Agra Expressway) சாலையில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி மொபைல் போலீஸ் கண்ட்ரோல் ரூம் வேன் (Mobile Police Control Room Van) உடன் அவர்கள் சமீபத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த பைக்கை இளைஞர் ஒருவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். அவருக்கு பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியவில்லை. அவரிடம் கைக்குழந்தை ஒன்றும் இருந்தது.
பைக்கின் இரு பக்கமும் அளவுக்கு அதிகமான லக்கேஜ்கள் இருந்தன. குறிப்பாக எளிதில் தீப்பற்றக்கூடிய பைகள் அதிக அளவில் இருந்தன. அவை பைக்கின் லைசென்சரில் உரசி கொண்டிருந்தன. இந்த சூழலில் லைசென்சர் அதிகம் சூடானதால், பைகள் தீப்பற்றி எரிய தொடங்கின. இதனை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கவனித்து விட்டனர்.
ஆனால் பைக்கில் சென்றவர்களுக்கு, பைகள் தீப்பற்றி எரிவது தெரியவில்லை. இதன் காரணமாக அந்த இளைஞர் பைக்கை தொடர்ந்து ஓட்டி சென்று கொண்டேயிருந்தார். விபரீதத்தை புரிந்து கொண்ட போலீசார், உடனடியாக பைக்கை சேஸ் செய்ய தொடங்கினர். வழி கிடைக்க வேண்டும் என்பதற்காக, எமர்ஜென்ஸி ஹூட்டரை (Emergency Hooter) ஆன் செய்து விட்டு, வெகு வேகமாக பைக்கை துரத்தினர்.
மற்ற வாகனங்களை ஓவர் டேக் செய்து விட்டு சென்றதன் காரணமாக, அடுத்த சில வினாடிகளில் பைக்கை பிடித்தனர். பின்னர் பைக்கில் லக்கேஜ்கள் தீப்பற்றி எரிவதால், பைக்கை நிறுத்தும்படி அதனை ஓட்டி சென்ற இளைஞருக்கு அவர்கள் சத்தமாக தெரிவித்தனர். அப்போதுதான் அந்த இளைஞருக்கு நடப்பதே தெரிந்தது. உடனே அவர் பைக்கை சாலையோரமாக நிறுத்தினார்.
பின்னர் தீ அணைப்பானுடன் பைக்கை நோக்கி ஓடிய போலீசார், தீப்பற்றி எரிந்த லக்கேஜ்களை பைக்கில் இருந்து அகற்றி விட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அடுத்த சில வினாடிகளில் தீ அணைக்கப்பட்டு விட்டது. போலீசார் மட்டும் கவனிக்காமல் இருந்திருந்தால், பைக் முழுமைக்கும் தீ பரவி பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.
ஆனால் நல்ல வேளையாக அவ்வாறு நடக்கவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மொபைல் போலீஸ் கண்ட்ரோல் ரூம் வேனின் உள்ளே இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆதித்யா திவாரி என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.
|
எந்தவொரு வாகனத்தின் லைசென்சர் என்றாலும், மிக வேகமாக சூடாகி விடும். லைசென்சர் வழியாக வெளியேறும் வெப்பமான வாயுக்கள், அதன் டெம்ப்ரேச்சரை எளிதில் அதிகரித்து விடுகின்றன. ஆனால் ஒரு சில சைலென்சர்களில், ஹூட் ஷீல்டு (Heat Shield) வழங்கப்படுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை இது குறைக்கிறது.
என்றாலும் ஹூட் ஷீல்டுகள் வெப்பத்தின் தாக்கத்தை முழுமையாக குறைத்து விடாது. ஓரளவிற்கு மட்டுமே குறைக்கும். எனவே எப்போதும் கவனமாக இருப்பதே நல்லது. ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் நடைபெற்ற தீ விபத்து சம்பவத்திற்கு சைலென்சர் சூடுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. சைலென்சர் சூடு காரணமாக லக்கேஜ்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
இரு சக்கர வாகனங்களில் லக்கேஜ்களை முறையாக வைத்து கொண்டு பயணிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. எனவே இனி இரு சக்கர வாகனங்களில் லக்கேஜ்களை வைக்கும்போது கவனமாக இருங்கள். இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க சேடில் பேக்குகளை (Saddlebags) பயன்படுத்தலாம்.
மோட்டார் சைக்கிள்களுக்கு என பிரத்யேகமாக சேடில் பேக்குகள் உருவாக்கப்படுகின்றன. சேடில் பேக்குகளை பயன்படுத்தினால், சைலென்சரில் இருந்து போதுமான இடைவெளி கிடைக்கும். இதன் மூலம் லக்கேஜ் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் நீங்கும். இச்சம்பவத்தை முன் உதாரணமாக கொண்டு இனி சேடில் பேக்குகளை பயன்படுத்த தொடங்குங்கள்.
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!