Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 6 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 6 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா
யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளரின் புக்கிங்கை ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதிரடியாக கேன்சல் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஜாவா மோட்டார்சைக்கிள்கள் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. மிக நீண்ட இடைவெளிக்கு பின் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் மீண்டும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்தனர்.
ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஜாவா மோட்டார்சைக்கிள்கள் சரியாக டெலிவரி செய்யப்படவில்லை. டெலிவரி எப்போது தொடங்கப்படும்? என்ற தகவல் ஆரம்பத்தில் வெளியாகாமல் இருந்தது. இதன்பின் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு வழியாக டெலிவரி தொடங்கியது. ஆனாலும் கூட சரியான முறையில் டெலிவரி செய்யப்படவில்லை.
எனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் விரக்தியடைந்தனர். பலர் சமூக வலை தளங்கள் வாயிலாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதுபோன்ற நிகழ்வுகள் காரணமாக ஜாவா தொடர்ச்சியாக தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வந்தது. இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு முறை ஜாவாவின் பெயர் செய்திகளில் அடிபட்டுள்ளது.
ஜாவா வாடிக்கையாளர் ஒருவரின் சமூக வலை தள பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. எதிர்பார்த்த நேரத்திற்கு முன்னதாகவே தனக்கு ஜாவா மோட்டார்சைக்கிள் கிடைத்து விட்டதாக அந்த வாடிக்கையாளர் சமூக வலை தளங்களில் தெரிவித்துள்ளார். அவரது பெயர் சவுரப் யாதவ். கடந்த மே மாதம் ஜாவா 42 பைக்கை புக்கிங் செய்ததாக அவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் அவருக்கு நடப்பு அக்டோபர் மாதம் மோட்டார்சைக்கிள் டெலிவரி செய்யப்பட்டு விட்டதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர தான் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டிற்கு மட்டுமே புக்கிங் செய்திருந்ததாகவும், ஆனால் தனக்கு ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் சவுரப் யாதவ் கூறியுள்ளார்.
ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு முன்பதிவு செய்துவிட்டு பலர் நீண்ட காலமாக காத்து கொண்டுள்ளனர். அப்படி இருக்கையில் குறுகிய காலத்திலேயே ஜாவா மோட்டார்சைக்கிளை டெலிவரி பெற்று விட்டதாக சவுரப் யாதவ் கூறியுள்ளார். இதன் காரணமாக சவுரப் யாதவின் பேஸ்புக் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால் இதுபோல் எதுவும் நடக்கவில்லை என ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் விதமாக தனது சமூக வலை தள பக்கங்களில் ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
''வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவது மட்டுமே இதுபோன்ற பதிவுகளின் ஒரே நோக்கம்'' என ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சவுரப் யாதவால் மேற்கொள்ளப்பட்ட முன்பதிவை அதிரடியாக கேன்சல் செய்துள்ளது.
இது ஒரு போலியான பதிவு என்ற காரணத்தை கூறி புக்கிங்கை ரத்து செய்துள்ளது ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம். ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் டெலிவரியை உரிய நேரத்தில் செய்திருந்தால் இதுபோன்ற போலி பதிவுகளுக்கு வேலையே இருந்திருக்காது. ஜாவா நிறுவனத்தை சுற்றி அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்து கொண்டேதான் இருக்கிறது.
சமீபத்தில் ஜாவா உரிமையாளர் ஒருவர் தனது பைக்கின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். பைக்கின் பாகங்கள் துருப்பிடித்திருப்பதை இந்த புகைப்படங்கள் நமக்கு காட்டின. இது போலியான பதிவு அல்ல. உண்மையானதுதான். எனினும் சம்பந்தப்பட்ட ஜாவா டீலர்ஷிப் மூலமாக இந்த பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!