இந்தியாவை ஆள நினைக்கும் பிரிட்டிஷ்...? எப்படி தெரியுமா...?
மீண்டும் இந்தியாவை ஆள நினைக்கும் பிரிட்டிஷ், எந்த வகையில் தெரியுமா...? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான கோ-ஜீரோ மொபிலிட்டி, தனது புத்தம் புதிய இரண்டு இ-சைக்கிள்களை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்காக இந்த நிறுவனம் கொல்கத்தாவை மையமாகக்கொண்டு இயங்கும் கிர்தி சோலார் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் இணைந்துதான், இந்தியாவில் இந்த இ-சைக்கிள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோன்று, எதிர்கால இ-சைக்கிள்களையும் இந்த இரு நிறுவனங்களும் இணைந்துதான் வெளியிட இருக்கின்றன. பேட்டரியால் ஓடும் இந்த இ-சைக்கிள்கள் 'ஒன்' மற்றும் 'மைல்' ஆகிய இரண்டு வேரியண்ட்களில் களமிறங்கியுள்ளன.

ஒன் மாடல் பேட்டரி சைக்கிளின் விலை 32 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணியக்கப்பட்டுள்ளது. இது, 400Wh கொண்ட லித்தியம் பேட்டரியால் இயங்கிறது. இந்த பேட்டரி சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை செல்லும்.

இதேபோன்று, மற்றுமொரு மாடலான மைல், 29 ஆயிரத்து 999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த சைக்கிளில் 300Wh லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 45 கிமீ தூரம் வரை செல்லலாம். அண்மையில் இந்த இரு இ-சைக்கிளையும் அறிமுகம் செய்த இந்த நிறுவனம், தற்போது இந்தியாவில் இந்த இரு இ-சைக்கிளின் விற்பனையையும் அதிகரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (ஏப்ரல் 15) அறிவிப்பு ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் தேவையை அறிந்து கோஜீரோ மொபிலிட்டி தனது இரண்டு விதமான இ-சைக்கிள்களை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும், விற்பனையை விரிவாக்கும் விதமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், டீலர்கள், ரீடெய்லர்கள் மற்றும் சேனல் பார்ட்னர்களின் இணைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 18 எக்ஸ்பீரியன்ஸ் சேனல்கள், 80 சேனல் பார்ட்னர்கள், 1000த்திற்கும் மேற்பட்ட ரீடெய்லர்கள் மற்றும் ஆன்லைன் விற்பனையாளர்கள் என கோஜீரோ மொபிலிட்டி மும்முனை விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிறுவனம் வருகின்ற 2021ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 18 எக்ஸ்பீரியன்ஸ் சேனல்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மையங்கள் பிரான்ஸை மையமாகக் கொண்டு, உதிரிபாகங்கள் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் சேனல்கள் மையங்களை இயக்கும் எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அனைத்து பணிகளும் தொடங்கியப் பின்னர், இ-சைக்கிளுக்கான டெஸ்ட் டிரைவ் தொடங்கப்படும் என கோ-ஜீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு, கோஜீரோ மொபிலிட்டி நிறுவனம் இந்தியா முழுவதும் தனது இரு இ-சைக்கிள்களின் ஆதிக்கத்தையும் செலுத்தும் வகையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக எரிபொருள் வாகனங்களால் ஏற்பட்டு வரும் பின் விளைவிற்கு இதுபோன்று இ-சைக்கிள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








