நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டும் வாகன ஓட்டி: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க

லாரி ஓட்டுநர் ஒருவருக்கு இதுவரை விதிக்கப்படாத அளவிலான அபராத் தொகையைப் போலீஸார் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அபராதத் தொகையைக் கேட்டால், நிச்சயம் நீங்கள் கனவில்கூட விதிமீறலைச் செய்ய மாட்டீங்க. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

இந்தியாவில் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களால், விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது. இதனைக் கட்டுபடுத்தும் விதமாக, அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதில் பலனின்று காணப்படுகின்றது.

ஆகையால், இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் வகையில், புதிய அபராதத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

இத்திட்டம், நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையைக் காட்டிலும், பன் மடங்கு உயர்த்தி வசூலிக்க வழிவகைச் செய்துள்ளது.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

புதிய திட்டத்திற்கு ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல மாநிலங்கள் வரவேற்பு அளித்துள்ளன. ஆகையால், இதற்கு வரவேற்பு மற்றும் எதிர்ப்பு ஒரு சேர இருக்கின்றது.

அதேபோன்று, புதிய அபராதத் திட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்திருக்கும் மாநிலங்களில் இருந்து வெளிவரும் செய்திகள் எல்லாம், மக்களை அதிர்ச்சியில் உரைய வைக்கின்ற அளவிற்கு உள்ளன.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

ஏனென்றால் விதிமீறல்களுக்கான அபராதங்கள் அந்த அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணமாக, ஹரியானா மாநிலத்தில், டெல்லியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருக்கு ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதம் வழங்கப்பட்டது. இத்தனைக்கு அவரின் ஸ்கூடடர் 16 ஆயிரம் ரூபாய் மதிப்பைக் கொண்டது என கூறப்படுகின்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

இதேபோன்று, மதுபோதையில் ஆட்டோவை இயக்கி வந்த ஓட்டுநருக்கு ரூ. 45 ஆயிரத்திற்கான அபராதத் தொகை வழங்கப்பட்டது. இச்சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியிருந்தது. இவர், மதுபோதையில் இருந்தது மட்டுமின்றி, சில விதிமீறல்களில் ஈடுபட்டதன் காரணத்தால் இந்த உச்சபட்ச தொகை விதிக்கப்பட்டது.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் மீண்டும் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இது, முன்னதாக விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

அந்தவகையில், முறைகேட்டில் ஈடுபட்ட லாரி உரிமையாளருக்கு 88 ஆயிரம் ரூபாய்க்கான அபராதச் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த 3ம் தேதி அரங்கேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செல்லாண் அதிகம் வைரலானதை அடுத்து வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

அசோக் ஜாதவ் என்ற லாரி ஓட்டுநருக்குதான் இத்தகைய அபராதம் வழங்கப்பட்டுள்ளது. இதனை, சம்பல்பூர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அவருக்கு வழங்கியுள்ளனர்.

அவருக்கு வழங்கப்பட்ட அபராதத்திற்கான தகவலை கீழே காணலாம்...

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

தொடர்பில்லாத நபரை வாகனத்தை இயக்க வைத்தது (ரூ.5 ஆயிரம்).

லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது (ரூ.5 ஆயிரம்).

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடையில் சரக்கு ஏற்றியது (ரூ.56 ஆயிரம்).

சரக்கை ஒழுங்கற்ற வடிவில் வாகனத்தில் ஏற்றி ஆபத்தான முறையில் எடுத்துச் சென்றது (ரூ.20 ஆயிரம்).

பொது விதிமீறல் (ரூ.500). ஆகிய குற்றங்களுக்காக அஷோக் ஜாதவுக்கு மொத்தம் ரூ.86,500-க்கான அபராதம் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

இந்த லாரி பிஎல்ஏ எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. இது ஜேசிபி இயந்திரங்களை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்த செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு, ஜேசிபி இயந்திரத்தை எடுத்துச் செல்லும்போதுதான் இது போலீஸாரின் பிடியில் சிக்கியது.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

போலீஸாரி விதித்த அபராதத் தொகையில் ரூ. 70 ஆயிரத்திற்கான பணம் மட்டும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. மீதமுள்ள தொகையைச் செலுத்த கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க!

அதேசமயம், அசோக் ஜாதவ் செலுத்தியுள்ள இந்த அபராதத் தொகை இதுவரை இந்தியாவிலேயே அதிகமாக செலுத்தப்பட்ட அபராதத் தொகை என கூறப்படுகின்றது. ஆகையால், இதற்கு முன்னதாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் காட்டிலும் உச்சபட்ச அபராதம் என இது கருதப்படுகின்றது.

Article Published On: Monday, September 9, 2019, 13:07 [IST]
English summary
Truck Driver in Odisha Fined Rs 86,500; Highest in Country Under New Motor Vehicles Act. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+