Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்
வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர்வ டெலிவரி தொடங்கப்படும் முன்பாக, ஜாவா பைக்குகள் ஏலம் விடப்படுகின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் பெருமிதப்படுவது உறுதி.
வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜாவா (Jawa) பைக்குகள் இந்தியாவில் ரீ லான்ச் செய்யப்பட்டு 4 மாதங்களும் மேல் ஆகி விட்டன. கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி நடைபெற்ற மிக பிரம்மாண்டமான விழாவில், ஜாவா கிளாசிக் (Jawa Classic) மற்றும் ஜாவா 42 (Jawa 42) என்ற பெயர்களில், 2 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 293 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27.3 பிஎஸ் பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இரண்டு பைக்குகளிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
எனினும் ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி (Delivery) இன்னும் தொடங்கப்படவில்லை. போட்டி போட்டு கொண்டு ஆர்வமாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் அனைவரும் டெலிவரிக்காக காத்து கிடக்கின்றனர். ஆனால் டெலிவரி தொடங்குவது எப்போது? என்பதில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
ஜாவா பைக்குகள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே, அதன் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஜாவா டெலிவரி தொடங்கப்பட்டால், ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்னமும் ஜாவா பைக்குகளின் டெலிவரி தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் டெலிவரி தொடங்கப்படாததால், புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் ஜாவா பைக்குகளின் டெலிவரி இன்று முதல் (மார்ச் 24) தொடங்கப்படும் என ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றும் டெலிவரி தொடங்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த சூழலில் ஜாவா மோட்டார் சைக்கிளின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் ஹேண்டிலில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் டெலிவரி தொடங்கப்படுவதற்கு முன்னதாக ஜாவா மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படவுள்ளன. இதற்கென தனியாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. இதில் திரட்டப்படும் நிதியானது, உயிர் தியாகம் செய்த இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது. அவர்களின் கல்வி செலவுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
ஆனால் ஏலம் நடைபெறும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக அடுத்த வாரத்தில் ஏலம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் முடிந்த உடன், புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜாவா மோட்டார் சைக்கிள்களை டெலிவரி செய்யும் பணிகள் உடனடியாக தொடங்கப்படவுள்ளது.
எனவே இம்மாத இறுதிக்குள் டெலிவரி பணிகள் தொடங்கி விடும் என கூறப்படுகிறது. ஆனால் அறிமுக விழாவின்போது காட்சிப்படுத்தப்பட்ட பைக்குகள்தான் ஏலம் விடப்படுமா? அல்லது பாதுகாப்பு படைகளின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் ஏலம் விடப்படுமா? என்பது தெரியவில்லை.
ஜாவாவின் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு பாதுகாப்பு படைகளை கௌரவிக்கும் வகையில் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளதை (பெகாசஸ் மற்றும் கிளாசிக் சிக்னல்ஸ்) கடந்த காலங்களில் நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. இதனிடையே முதல் வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 8,000 ஜாவா மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
டிமாண்ட்டிற்கு ஏற்ப இரண்டாம் ஆண்டு முதல் உற்பத்தியில் மாற்றம் செய்யப்படும். தற்போதைய நிலையில் போட்டியாளரான ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை ஒரு மாதத்திற்கு 35,000 யூனிட்கள் என்ற நிலையில் உள்ளது. ஜாவா ஆதிக்கம் செலுத்தினால், கிளாசிக் 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை குறைய கூடும்.
முன்னதாக நவம்பர் 15ம் தேதியன்று நடைபெற்ற அறிமுக விழாவில், ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 தவிர ஜாவா பெராக் (Jawa Perak) என்ற மோட்டார் சைக்கிளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த பைக் தற்போது வரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. நடப்பாண்டின் இறுதியில்தான் ஜாவா பெராக் முறைப்படி லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடைய உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுடைய கல்வி செலவுக்கு நன்கொடை வழங்குவதற்காக ஜாவா பைக்குகளை ஏலம் விடும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிறுவனம்தான் பாரம்பரியம் மிக்க ஜாவா பைக்குகளை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!