Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் எழுந்து நடக்க முடியாத நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த மரண அடி இதுதான்...
ஜாவா கொடுத்த மரண அடி காரணமாக, மீண்டும் எழுந்து நடக்க முடியாத நிலைக்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
ஜாவா கொடுத்த மரண அடி காரணமாக, மீண்டும் எழுந்து நடக்க முடியாத நிலைக்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
1970, 80 கால கட்டங்களில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஜாவா மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி இடையில் நிறுத்தப்பட்டது. இருந்தாலும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.
வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி நடைபெற்ற விழாவில், ஜாவா, ஜாவா 42 மற்றும் பெராக் ஆகிய மூன்று மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
இதில், ஜாவா மோட்டார் சைக்கிளின் விலை 1.64 லட்ச ரூபாய். அதே சமயம் ஜாவா 42 மோட்டார் சைக்கிளுக்கு 1.55 லட்ச ரூபாயும், ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளுக்கு 1.89 லட்ச ரூபாயும் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடக்கத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு முன்பதிவு முடிவடைந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
பாரம்பரியம் மிக்க ஜாவா மோட்டார் சைக்கிள்களை சொந்தமாக்கி விட வேண்டும் என வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வருவதை இந்த தகவல்கள் உறுதி செய்கின்றன. இதனால் ஜாவா மோட்டார் சைக்கிள்களின் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு அதிர்ச்சியடைந்துள்ளது.
மீண்டும் விற்பனைக்கு அறிமுகமானது முதலே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஜாவா வரிசையாக பல்வேறு அதிர்ச்சிகளை கொடுத்து கொண்டுள்ளது. ஆரம்பத்தில் ராயல் என்பீல்டு ஷோரூம்களுக்கு அருகிலேயே ஜாவா டீலர்ஷிப்களும் திறக்கப்படும் என தகவல்கள் வெளியானது.
இதன்படி புனே நகரில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஜாவா டீலர்ஷிப், ராயல் என்பீல்டு ஷோரூமிற்கு அருகேதான் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி வரிசையாக பல்வேறு அடிகளை ஜாவா சரமாரியாக கொடுத்து கொண்டே வருவதால், ராயல் என்பீல்டு கதிகலங்கி போயுள்ளது.
2018ம் ஆண்டின் ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் இருந்தது. ஆனால் இது எல்லாம் ஜாவா மீண்டும் களத்திற்கு வந்த நவம்பர் மாதம் வரைதான். அதன்பின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிபோனது.
இந்த சூழலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் டிசம்பர் மாத சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் (இந்தியாவில்) மொத்தம் 56,026 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.
ஆனால் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் 65,367 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கைதான் தற்போது 56,026ஆக சரிந்துள்ளது. இது 14 சதவீத வீழ்ச்சியாகும்.
என்றாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி வளர்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,601 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே ராயல் என்பீல்டு ஏற்றுமதி செய்திருந்தது. இது கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2,252ஆக அதிகரித்துள்ளது.
எனவே ஏற்றுமதியில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 41 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. என்றாலும் ஒட்டுமொத்த விற்பனை (உள்நாடு+ஏற்றுமதி) என்ற வகையில் பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது.
2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாடு+ஏற்றுமதி) 58,278 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக 66,968 பைக்குளை விற்பனை செய்திருந்தது.
எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையானது 13 சதவீதம் என்கிற அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. முன்னதாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 4 சதவீத சரிவை சந்தித்தது. அந்த மாதத்தில்தான் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் வந்த டிசம்பர் மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை சரிவானது 4 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜாவா பைக்குகளுக்கான முன்பதிவு 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை முடிந்து விட்ட சூழலில், ராயல் என்பீல்டு அடுத்தடுத்து சரிவை சந்தித்து வருகிறது.
ஜாவாவிற்கு கடும் சவால் அளிக்கும் வகையிலான திட்டங்களை உடனடியாக செயல்படுத்தாவிட்டால், வருங்காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!