Just In
- 34 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News நான் கொஞ்சம் பிசி.. இப்போதைக்கு நோ! பிரதமர் மோடி சந்திப்பை ஒத்தி வைத்த எலான் மஸ்க்! இதுதான் காரணமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது ஜாவா!
ஸ்க்ராம்ப்ளர், ஆஃப்ரோடு உள்ளிட்ட வகைகளில் 3 புதிய மோட்டார்சைக்கிள்களை மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது ஜாவா நிறுவனம். விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த ஆண்டு நவம்பரில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதித்தது ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம். மஹிந்திராவின் துணை நிறுவனமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம்தான் ஜாவா மோட்டார்சைக்கிள் வர்த்தகத்தை இந்தியாவில் பொறுப்பேற்றுள்ளது.
இந்தியாவில் முதலாவதாக கொண்டு வரப்பட்ட ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களின் விற்பனை உடனடியாக துவங்கப்பட்டது. ஆனால், பெராக் என்ற உயர்வைக மாடலின் விற்பனை உடனடியாக துவங்கப்படவில்லை. ஜாவா மற்றும் ஜாவா 422 மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்தும், உற்பத்தி பிரச்னை காரணமாக, நீண்ட காத்திருப்பு நிலவுகிறது.
இதனால், பெராக் மாடலின் விற்பனையை தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம். இந்த நிலையில், தி ஹிந்து பத்திரிக்கைக்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆசிஷ் ஜோஷி பேட்டி அளித்துள்ளார். அதில், 3 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களும் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், வடிவமைப்பு மற்றும் வெவ்வேறு சிசி திறன் கொண்ட எஞ்சின் ரகங்களில் வர இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
இந்த மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களும் அடுத்த 18 மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 15ந் தேதி ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டு இந்தியாவில் காலடி வைத்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாட இருக்கிறது.
இதற்காக, நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், இந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் புதிய பெராக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவும், விற்பனையும் துவங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இதுதவிர்த்து, ஆஃப்ரோடு மற்றும் ஸ்க்ராம்ப்ளர் வகை மோட்டார்சைக்கிள்களையும் ஜாவா அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய தகவல்கள் ஜாவா பிரியர்களின் ஆவலை வெகுவாக அதிகரித்துள்ளது.
தற்போது ஜாவா 42 மற்றும் ஜாவா க்ளாசிக் 300 மோட்டார்சைக்கிள்களில் 300 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 27 எச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெராக் மோட்டார்சைக்கிளில் இருக்கும் 334 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 30 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட இருக்கும் எஞ்சின் குறித்தும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. ஜாவா அடிப்பபடையிலான மாடல்களாக இவை வர இருக்கின்றன. எனவே, 300 சிசி எஞ்சின் புதிய ஆஃப்ரோடு மற்றும் ஸ்க்ராம்ப்ளர் மாடல்களில் பயன்படுத்தபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: The Hindu
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!