சத்தியமா இத நீங்க நம்பவே மாட்டீங்க... இந்தியாவில் சுஸுகி பைக்குகளுக்கு இப்படி ஒரு வரவேற்பா...!
சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தயாரிப்புகள், நம்ப முடியாத புதிய விற்பனை விகிதத்தைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருகின்றது. ஆனால், நடப்பாண்டு தொடங்கியது முதல் இந்த அந்தஸ்தை இழக்கும் சூழலில் அது சிக்கியுள்ளது. இதற்கு, கடந்த ஜனவரி மாதம் முதல் நிலவி வரும் விற்பனைச் சரிவு மற்றும் மந்த நிலையே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த மந்தநிலையில் சிறிய மாற்றத்தை தற்போதைய விழாக் காலங்கள் கொடுத்திருக்கின்றன. இந்தியர்களின் மன நிலையை உணர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள், பண்டிகைக் காலங்களை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வாரி வழங்க வருகின்றன.

இதன்காரணமாக, மாருதி சுஸுகி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான விற்பனை விகிதத்தைப் பெற்று வருக்கின்றன.
ஆனால், அது கடந்த வருடங்களில் காணப்பட்ட விற்பனைகளைக் காட்டிலும் சற்று குறைவானதாகதான் காணப்படுகின்றது.

இந்நிலையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் மட்டும் தொடர்ச்சியாக விற்பனை வளர்ச்சியைக் கண்டு வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் உள்ளிட்ட மாதங்களின் விற்பனை விகிதத்தைப் பார்த்தோமேயானால், அது புதிய உச்சத்தைப் பெற்றிருக்கின்றன. முன்னதாக, செப்டம்பர் மாதத்திலும் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன உற்பத்தி நிறுவனங்களும் வீழ்ச்சியை சந்தித்துவரும் வேலையில், சுஸுகியின் இந்த விற்பனை விகிதம் புதிய சாதனையாக காணப்படுகின்றது. மேலும், மற்ற வாகன நிறுவனங்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான்களான ஹீரோ மற்றும் ஹோண்டோ போன்ற நிறுவனங்களால்கூட எட்ட முடியாத கனியை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பெற்றிருப்பதாக கருத்துகள் பரவிய வண்ணம் உள்ளன.
சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு, அது அண்மையில் களமிறக்கிய புதிய தயாரிப்புகளே முக்கிய காரணமாக உள்ளது.

புதிய மாடல்களைக் களமிறக்கியது மட்டுமின்றி அதற்கு பல்வேறு சலுகைகளையும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்காரணமாகவே, இந்தி வாகனச் சந்தை திக்கி தினறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்கூட கணிசமான விற்பன விகிதத்தை சுஸுகியால் பெற முடிந்தது.

அந்தவகையில், கடந்த மாதம் மட்டும் சுஸுகி மோட்டார்சைக்கிளின் 74,610 யூனிட்டுகளுக்கான விற்பனை நடைபெற்றுள்ளது.
இது முந்தையக் காலக்கட்டத்தைக் காட்டிலும் 13.61 சதவீதம் வளர்ச்சியாகும். மேலும், இது அக்டோபர் மாதம் மட்டும் கிடைத்த விற்பனை வளர்ச்சியாகும்.

இது, உள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கையாகும். இதுவே, இந்த விற்பனை விகிதத்தை்க கடந்த வருட அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தோமேயானால் சற்று குறைவாக 65,673 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டிருந்தன.

ஆகையால், இந்த 2019 அக்டோபர் மாத விற்பனையானது கடந்த ஆண்டு அக்டோபரை மட்டுமின்றி இதற்கு முன்பாக செய்யப்பட்ட அனைத்து விற்பனை சாதனையும் முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னர், அதிகபட்ச விற்பனையாக 66,215 யூனிட்டுகள் இருந்தன.

அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை 4.94 லட்சம் யூனிட்டுகளை அது உற்பத்தி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, வி-ஸ்டார்ம் 1000 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்வதற்கான பணியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








