Just In
- 50 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 2 hrs ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 2 hrs ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 3 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- News தமிழக கலாசாரமாக இருந்தாலும்! ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக பரவிய வீடியோ.. பாஜக அண்ணாமலை விளக்கம்
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Actress Nayanthara: படத்திற்கு படம் சம்பளத்தை ஏற்றும் நயன்தாரா?.. த்ரிஷாவை தொடர்ந்து அதிரடி?
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஹீரோ, ஹோண்டா நிறுவனங்கள் ஆச்சரியம்: மகிழ்ச்சியின் உச்சத்தில் சுஸுகி... சோதனையிலும் ஓர் சாதனை!
நாட்டின் ஜாம்பவான்களாக செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்களுக்கு எட்டாத கனி ஒன்று சுஸுகி மோட்டார்சைக்கிளுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
நடப்பாண்டின் ஜனவரி மாதம் துவங்கியது முதல் இந்திய வாகனத்துறை மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இந்த வீழ்ச்சியானது, 2018ம் ஆண்டின் மத்தியிலேயே தொடங்கியிருந்தாலும், அதன் வீரியம் ஜனவரி மாதத்தில் இருந்தே வெளியே தெரியவந்தது.
இந்திய வாகனத்துறையின் இத்தகைய மோசமான நிலைக்கு, அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடக்கைகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் பெருநகரங்கள் சுற்றுப்புற சீர்கேட்டை அடைந்து வருகின்றன. அதற்கு மிகப்பெரிய உதாரணமாக புது டெல்லி இருக்கின்றது. இங்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசுற்ற புகை, பனி படலத்தைப்போன்று காட்சியளிக்கும்.
இந்த புகை காற்றை மாசடையச் செய்வதுடன் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆரம்ப புள்ளியாக அமைகின்றது. ஆகையால், இத்தகைய சூழலை கணிசமாக குறைக்கும் விதமாக எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் எதிரொலியாக இந்தியாவில் வாகன விற்பனை மிக மோசமான மந்த நிலையைச் சந்தித்து வருகின்றது. இந்த மந்த நிலையில், வாகன உற்பத்தியில் ஜாம்பவான்களாக செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஹீரோ மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையான மந்த நிலையில் சிக்கி தத்தளித்து வருகின்றன.
இந்நிலையில், ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் மட்டும் கடந்த காலங்களில் நல்ல விற்பனை விகித்ததைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு, அது அண்மையில் அறிமுகம் செய்த ஜிக்ஸெர் பேஸ்லிஃப்ட் மாடல்களின் வருகையே முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆகையால், கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் கணிசமான விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது.
அண்மைக் காலங்களாக தீவிரமடைந்து வரும் விற்பனை வீழ்ச்சியை சமாளிக்கும் விதமாக, அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகின்றன. இருப்பினும் அதில் போதிய பலன் கிடைக்கவில்லை.
ஆனால், சுஸுகி நிறுவனத்தின் சில முயற்சிகளுக்கு மட்டும் நல்ல பலன் கிடைத்துள்ளது. அதனால்தான் தற்போது, இந்திய வாகன உலகில் ஜம்பவான்களாக செயல்பட்டு வரும் ஹீரோ மற்றும் ஹோண்ட ஆகிய இரு நிறுவனங்களுக்கும் எட்டா கனியாக மாறியுள்ள விற்பனை வளர்ச்சி சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
தற்போது சுஸுகி பெற்றிருக்கும் இந்த வளர்ச்சியை மிகப்பெரிய வளர்ச்சி என்று கூறிவிட முடியாது. இருப்பினும், சமீபகாலமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சந்தித்து வரும் கடுமையான மந்தநிலையில், தற்போது சுஸுகி பெற்றிருக்கும் இந்த வளர்ச்சி, ஆச்சரியமளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும், நடப்பாண்டின் செப்டம்பர் மாதத்தில் 2.11 சதவீத விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது.
சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 72,134 யூனிட் இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. ஆனால், 2019ம் ஆண்டில் 73,658 யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது. இது உள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட விற்பனையாகும்.
இதில், உள்நாட்டு சந்தைக்காக மட்டும் 63,382 யூனிட் இருசக்கர வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் 63,140 யூனிட்டுகளாக உள்ளன. ஆகையால், சுஸுகி மோட்டார்சைக்கிள்களுக்கான உள்நாட்டு சந்தை எதிர்பார்ப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இது சோதனை காலத்தில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு