Just In
- 4 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 4 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 5 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 6 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்
பைக்கில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த வாலிபரால் நேரவிருந்த அசம்பாவிதம் நூலிழையில் தவிர்க்கப்பட்டது. தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை, பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.
உலகிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக நமது இந்திய சாலைகள் உள்ளன. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் அதனை உறுதி செய்கின்றன. இந்திய சாலைகளில் ஏராளமான ஆபத்துக்கள் ஒளிந்திருக்கின்றன.
இங்கு சாலைகளில் சுற்றி திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் திடீர் திடீரென வாகனங்களின் குறுக்கே வரும். சில சமயங்களில் மனிதர்களும் கூட. எனவே இந்திய சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பது என்பது எப்போதும் அபாயகரமானதுதான்.
அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென கால்நடைகளோ அல்லது மனிதர்களோ குறுக்கே வந்து விட்டால் வாகனத்தை கட்டுப்படுத்துவது கடினம். கண்ணிமைக்க கூட நேரம் இருக்காது. இதன் காரணமாகதான் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகின்றன.
என்றாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தொடர்ந்து அதிக வேகத்தில் பறந்து கொண்டேதான் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. சாலையில் உடன் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளும் சேர்ந்துதான் பாதிக்கப்படுகின்றனர்.
இருந்தபோதும் பலர் இதனை உணர்ந்து கொள்ள மறுக்கின்றனர். இந்த சூழலில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 (TVS Apache RR 310) பைக்கின் திகிலூட்டும் வீடியோ ஒன்று, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காண்பவர்கள் நெஞ்சை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் உள்ள அந்த வீடியோ, இந்திய சாலைகள் எவ்வளவு அபாயகரமானது? என்பதை நமக்கு உணர்த்துகிறது. காலியாக இருந்த தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ''குரூப் ரைடு'' சென்று கொண்டிருந்தனர்.
ஆளுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்கள் பயணம் செய்தனர். பெரிய அளவில் வாகன நெரிசல் இன்றி, தேசிய நெடுஞ்சாலை காலியாக இருந்ததால் அவர்கள் அதிவேகத்தில் பைக்கை செலுத்தினர். இதன் உச்சகட்டமாக இளைஞர் ஒருவர் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டினார்.
அவர் ஓட்டியது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் ஆகும். மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் பயணம் செய்தது, பைக்கின் ஸ்பீடோமீட்டரில் தெளிவாக தெரிகிறது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த அனைத்து வாகனங்களையும் கிட்டத்தட்ட அவர் ஓவர்டேக் செய்து விட்டார்.
அத்துடன் வேகத்தையும் குறைக்கவில்லை. அப்படியே ''மெயின்டெய்ன்'' செய்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடப்பதற்காக இடைவெளி விடப்பட்டிருக்கும் பகுதி ஒன்று வந்தது. அந்த இடத்தில் வாகனங்கள் சாலையை கடக்க கூடும்.
என்றாலும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை ஓட்டி வந்த இளைஞர் வேகத்தை சற்று கூட குறைக்காமல் அப்படியே பயணம் செய்தார். அந்த நேரத்தில் மற்றொரு பைக்கில் வந்த வாகன ஓட்டி ஒருவர் அந்த இடத்தில் திடீரென சாலையை கடக்க முயற்சி செய்தார்.
சாலையை கடப்பதற்கு அவர் சிக்னல் காட்டவில்லை. அத்துடன் இன்டிகேட்டரையும் ''ஆன்'' செய்யவில்லை. சாலையை கடப்பதற்காக திடீரென பைக்கை முன்னோக்கி செலுத்தினார். கொஞ்சம் அசந்திருந்தால் இரு பைக்குகளும் பயங்கரமாக மோதி கொண்டு கோர விபத்து நிகழ்ந்திருக்க கூடும்.
என்றாலும் நல்ல வேளையாக அப்படி ஒரு அசம்பாவிதம் நிகழவில்லை. விபத்தில் இருந்து இரு பைக்குகளும் நூலிழையில் தப்பி விட்டன. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை ஓட்டிய இளைஞர், அதிவேகத்தில் பயணித்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை.
ஆனால் திடீரென இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் குறுக்கே வந்து விட்டார். இதனால்தான் இந்திய சாலைகள் மிகவும் அபாயகரமானவையாக கருதப்படுகின்றன. இங்கு யார் வேண்டுமானாலும் திடீர் திடீரென வாகனத்தின் குறுக்கே வரக்கூடும்.
நீங்கள் அதிவேகத்தில் பயணித்து கொண்டிருக்கும்போது, மற்ற வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது. இது கொடூரமான விபத்திற்கு வழிவகுத்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த சூழலில் 2 பைக்குகளும் விபத்தில் இருந்து தப்பிக்கும் திக்... திக்... வீடியோவை ரோட் பால்கான் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
சாலையை திடீரென கடக்க முயன்ற பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தது அனேகமாக பள்ளி மாணவராக இருக்க கூடும். நல்ல வேளையாக அனைவரும் தப்பித்து விட்டனர். இதனிடையே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக 125சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து டூவீலர்களிலும் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS-Anti-lock Braking System) இடம்பெறுவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களின் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அத்தியாவசியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களின் விலை சற்று உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!