Just In
- 1 hr ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 2 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முன்பதிவு தொகையை செலுத்தினால் போதும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்...
சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு புதிய ஆன்லைன் புக்கிங் ப்ரோகிராம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.
ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வரும் க்ரீவ்ஸ் காட்டன் லிமிடேட் நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பில் பிரபலமான ப்ராண்ட் ஆக உள்ளது. இந்நிறுவனம் எலக்ட்ரிக் மற்றும் பசுமை மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் பத்து வருடத்திற்கு மேலான அனுபவத்தை கொண்டு உள்ளது.
இந்நாள் வரை கிட்டத்தட்ட 50,000 ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் விற்றுள்ள இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 200க்கும் அதிகமான சில்லறை விற்பனை மையங்கள் மூலம் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் பசுமை போக்குவரத்தை கொண்டுவருவதில் தீவிரமாக உள்ள க்ரீவ்ஸ் நிறுவனம் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் வாங்கும் விதமாக ஆன்லைன் முன்பதிவு செயல்முறையை அமலுக்கு கொண்டுவந்துள்ளது.
ஏனெனில் தற்சமயம் உலகின் வல்லரசு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகள் மக்களை தனிமைப்படுத்தும் விதமாக ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றன. இந்தியாவில் ஊரடங்கு அடுத்த மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்தின் சார்பில் மக்கள் அனைவரும் ஊரடங்கையும், சமூக இடைவெளியையும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை மனதில் வைத்து கொண்டு தான் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனம் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆன்லைன் புக்கிங்கை துவங்கியுள்ளது.
இந்த செயல்முறையின் மூலம் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் ஆம்பியர் ஸ்கூட்டர்களை வாங்குவது மட்டுமில்லாமல், மற்றொரு சிறப்பம்சமாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொகையை மட்டும் புக்கிங் நேரத்தில் செலுத்தினால் போதும். ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும்.
ஸ்கூட்டருக்கான மீதி பணம் டெலிவிரி நேரத்தில் வசூலிக்கப்படும். ஆனால் இதன் டெலிவிரிகள் தற்சமயம் அமலில் உள்ள ஊரடங்கு திரும்ப பெற்ற பின்பே துவங்கவுள்ளன. அதேநேரம் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான 'தொடர்பில்லா' டெலிவிரி மற்றும் வாகன சுத்திகரிப்பு முறைகள் ஊரடங்கு முடிந்த பின்பும் தொடரவுள்ளன.
ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பெரும்பாலும் உணவு மற்றும் மருத்துவ பொருட்களை டெலிவிரி செய்பவர்கள் தான் உபயோகப்படுத்தி வருகின்றனர். இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவது 12 மரக்கன்றுகளை நடுவதற்கு சமம் என்ற கருத்து சந்தையில் பொதுவாகவே உள்ளது.
ஏனெனில் ஆம்பியர் போன்ற எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் டன் கணக்கில் எரிபொருள் பயன்பாட்டையும் மாசுவையும் கட்டுப்படுத்துகின்றன. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களின் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை காட்டிலும் 85-90 சதவீத செலவை மிச்சப்படுத்த இயலும் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இந்த புதிய ஆன்லைன் புக்கிங் செயல்முறைக்கு முன்பாக கொரோனோ வைரஸை எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர்களுக்காக ஸ்பெஷல் தள்ளுப்படிகளை க்ரீவ்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் புக்கிங் வசதி தற்போதைக்கு சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புனே போன்ற முக்கியமான நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கவுள்ளது
க்ரீவ்ஸ் ப்ராண்டின் பிரபலமான இ-ஸ்கூட்டர் மாடலான ஆம்பியர் ஜியல் ஸ்கூட்டரில் 1.2kW ப்ரஷ்லெஸ் டிசி ஹப் மோட்டார், 1.8kWk லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் வழங்கப்பட்டு வருகிறது. 75 கிலோ எடை கொண்டதாக உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜில் 75 கிமீ தூரமும், அதிகப்பட்சமாக 50 kmph என்ற வேகத்திலும் இயங்கக்கூடியது.
இதன் பேட்டரியின் சார்ஜை 0%-லிருந்து முழுவதும் நிரப்ப 6 மணிநேரங்கள் தேவைப்படும். அதேபோல் அதிகப்பட்சமாக 50kmph வேகத்தில் இயங்கும் இந்த ஸ்கூட்டர் மாடலை 6 வினாடிகளுக்கு முன்பாக டாப்பிங் செய்வதன் மூலமாக 55 kmph என்ற வேகத்திலும் இயக்க முடியும். எக்னோமிக் மற்றும் ஸ்பீடு என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எக்ஸ்ஷோரூமில் ரூ.67,000 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!