Just In
- 37 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சர்வதேச சந்தையில் கால் பதிக்கும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் சர்வதேச சந்தையில் கால் பதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் சிறந்த நிறுவனமாக பெயர் பெற்றுவிட்டது. பெங்களூர் மற்றும் சென்னையில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம் நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் படிப்படியாக வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக வர்த்தக விரிவாக்க முயற்சிகளில் சிறிது தடங்கல் ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு விதிகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், வர்த்தக விரிவாக்க முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.
மேலும், உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, பல வெளிநாடுகளிலும் தனது ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு விற்பனையை துவங்கவும் முடிவு செய்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வலுவான சந்தை இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், இந்த நாடுகளில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக இருப்பதால் அங்குள்ள மக்கள் மின்சார வாகனங்களை எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் தவிர்த்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்காவிலும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஏத்தர் எனெர்ஜி திட்டமிட்டுள்ளது. மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறப்பான வரவேற்பு இருப்பதால் அங்கும் வர்த்தகத்தை துவங்க திட்டமிட்டுள்ளது.
மேலும், தனது ஸ்கூட்டர்களை அங்கேயே உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வகையில், அசெம்பிள் செய்வதற்கான ஆலையையும் அமைப்பதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, அந்தந்த நாடுகளின் தேவையை மிக எளிதாகவும், விரைவாகவும் பூர்த்தி செய்ய முடியும். விலையையும் சரியாக நிர்ணயிக்க இயலும்.
ஏத்தர் நிறுவனம் தற்போது ஏத்தர் 450 என்ற மாடலை விற்பனையில் வைத்துள்ளது. கவரும் டிசைன், சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் அதி செயல்திறன் மிக்க இந்த ஸ்கூட்டர் மாடல் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட 450எக்ஸ் மாடல் கடந்த ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது நினைவிருக்கலாம்.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!