தொடர் விற்பனை சரிவு... சிக்கி தவிக்கும் பிரபல நிறுவனம்... இந்த நிறுவனத்துக்கே இப்படியொரு நிலைமையா..?
தொடர் விற்பனை சரிவில் பிரபல நிறுவனம் ஒன்று சிக்கி தவித்து வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக காட்சியளித்து வந்த இந்திய வாகனத்துறை அண்மைக் காலங்களாக கடும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டில் வரலாறு காணாத சரிவை எதிர்கொண்டது.
இதில், வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின.

அதில், இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனமும் ஒன்றாகும். இது, கடும் விற்பனை வீழ்ச்சியை தற்போது வரையிலும் சந்தித்து வருகின்றது. இதுகுறித்த தகவலை ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஜாஜ் நிறுவனம் அதன் விற்பனை தரவுகுறித்த பதிவை வெளியிட்டிருந்தது. அது, நடப்பாண்டின் ஜனவரி மாதத்துடைய விற்பனை தகவலாகும்.

இதில்தான் அதிர்ச்சியளிக்கும் அந்த தகவல் வெளியாகியுள்ளது. பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டு ஜனவரி மாதத்திலும் 3 சதவீத விற்பனைச் சரிவைச் சந்தித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டே அது கடும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது, இதைக்காட்டிலும் அதிக விற்பனைச் சரிவைச் சந்தித்திருக்கின்றது. இதை விளக்கும் வகையிலேயே 2020ம் ஆண்டின் ஜனவரி மாத சேல் ரிப்போர்ட் இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக கடந்த ஜனவரி மாதத்தில் 3,94,473 யூனிட்டுகளை பஜாஜ் விற்பனைச் செய்திருக்கின்றது. இது பஜாஜின் அனைத்து தயாரிப்புகளின் விற்பனை இலக்காகும்.

இதுவே, கடந்த வருட ஜனவரி மாதத்தை பார்த்தால் அப்போது 4,07,150 யூனிட்டுகளை அது விற்பனைச் செய்யதுள்ளது.
தற்போது விற்பனைச் செய்யப்பட்டிருக்கும் 3,94,473 யூனிட்டுகளில் 1,571,796 யூனிட்டுகள் உள்நாட்டு சந்தையில் விற்பனையானவையாகும். இதுவே, கடந்தாண்டு ஜனவரி மாதத்திற்கான விற்பனை தரவை பார்த்தால் 2,03,358 யூனிட்டுகளாக உள்ளன.

இவ்வாறு, பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டு தொடங்கியது முதலிலிருந்தே கடும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது.
ஆகையால், இந்த விற்பனை வீழ்ச்சியில் இருந்து தப்பிப்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து ஒரு சில பிரபல பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது.

அந்தவகையில், பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணியில் நடுத்தர எடை கொண்ட பிரிமியம் ரக பைக்குகள் இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளன. இந்த பைக்குகள் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்த பைக்குகளுக்காக புதிய எஞ்ஜின் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 200சிசி முதல் 750 சிசி வரையிலான எஞ்ஜின்கள் இதற்காக தயாரிக்கப்பட உள்ளன.

இரு நிறுவனத்தின் கூட்டணியில் தயாரிக்கப்படும் இந்த புதிய பைக்குகள் பஜாஜ் நிறுவனத்தின் டீலர்கள் வாயிலாக நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. தொடர்ந்து, வெளிநாடுகளில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டீலர்கள் மூலமாகவும் அந்த பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

தொடர்ந்து, பஜாஜ் - ட்ரையம்ப் கூட்டணியில் வரவிருக்கும் குறைவான பட்ஜெட் விலை பிரிமீயம் பைக்குகளாக இவை காட்சியளிக்க இருக்கின்றன. இது, டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் தயாராகும் பைக்குகளுக்கு கடுமையான போட்டியளிக்க இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, ஹார்லி டேவிட்சனின் புதுமுக மாடலாக அறிமுகமாக இருக்கும் 338 பைக்கிற்கும், ராயல் என்பீல்டு பைக்கிற்கும் போட்டியாக அமைய இருக்கின்றது. இதுபோன்ற நடவடிக்கை பஜாஜ் நிறுவனத்திற்கு உதவும் என அது எதிர்பார்க்கின்றது.


Click it and Unblock the Notifications








