Just In
- 16 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 39 min ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
Don't Miss!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!
பைக்கில் செல்பவர்கள் விபத்தில் சிக்கினால், தானியங்கி முறையில் உதவி கோரும் புதிய தொழில்நுட்பத்தை பாஷ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவிலும் இந்த நிறுவனம் பல இடங்களில் ஆலைகளை அமைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு முக்கிய உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகிறது.
மேலும், வாகனங்களுக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கண்டறிவதிலும் இந்த நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது கார்கள் விபத்தில் சிக்கினால், உடனடியாக அருகிலுள்ள அவசர மையங்களை தொடர்பு கொள்ளும் வசதி கொடுக்கப்படுகிறது.
இந்தியாவில் விற்பனையில் பல கார்களில் இந்த வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இதே தொழில்நுட்பத்தை பைக்குகளிலும் பயன்படுத்தும் வசதியை பாஷ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பமானது பைக்கின் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும். அதாவது, பைக் செல்லும் திரை, கோணம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கும். வினாடிக்கு 100 முறை பைக்கின் கோணம் குறித்த தகவல்களின் அடிப்படையில், பைக் நிலையாக செல்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கும்.
ஒருவேளை பைக் கீழே விழுந்து விட்டால், உடனடியாக அருகிலுள்ள அவசர உதவி மையத்திலிருந்து உதவி கோருவதற்கான வாய்ப்பை தானியங்கி முறையில் பாஷ் நிறுவனத்தின் தொழில்நுட்பம் வழங்கும். பைக்கிலிருந்து முதலில் பாஷ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் செல்லும்.
அங்கிருந்து பைக்கில் இருக்கும் ஜிபிஎஸ் மூலமாக அந்த இடத்திற்கு அருகிலுள்ள பாஷ் சர்வீஸ் மையம் அல்லது அங்குள்ள அவசர உதவி மையத்தின் மூலமாக பைக் ஓட்டுனர் இருக்கும் இடத்திற்கு மீட்புப் படையினர் சென்று மீட்க முடியும். இந்த தொழில்நுட்பம் முதல்முறையாக ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த தொழில்நுட்பம் ஹெல்ப் கனெக்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜெர்மனியை சேர்ந்த பைக் உரிமையாளர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பாஷ் முதல்கட்டமாக வழங்க உள்ளது.
இருப்பினும், ஜெர்மனிக்கு வெளியில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ஐயர்லாந்து, லக்சம்பெர்க், நெதர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பைக் உரிமையாளர்கள் சென்றாலும் இந்த உதவியை பெற முடியும்.
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!