Just In
- 1 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 20 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...
ஹோண்டா நிறுவனம் மீண்டும் டூவீலர் உற்பத்தியை எப்போதில் இருந்து தொடங்கவுள்ளது? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸால் (கோவிட்-19) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கு தற்போது வரை நீடித்து கொண்டுள்ளது. வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்.
ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே முடங்கி கிடந்த தொழில்கள் அனைத்தும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாட்டிற்கு வந்து கொண்டுள்ளன. இதில், கார் உற்பத்தி மற்றும் விற்பனை முக்கியமானது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அத்துடன் வாகனங்களை விற்பனை செய்யும் ஷோரூம்களும் மூடப்பட்டன. ஆனால் அரசால் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, கடந்த மே 4ம் தேதி முதல் இந்தியாவில் வாகன உற்பத்தி மீண்டும் தொடங்கியது. அத்துடன் டீலர்ஷிப்களும் திறக்கப்பட்டன. ஆனால் தொழிற்சாலைகள் மற்றும் டீலர்ஷிப்களில் அரசு வழங்கிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி உள்பட பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. ஆனால் ஹோண்டா டூவீலர் நிறுவனம் இன்னும் உற்பத்தி பணிகளை தொடங்கவில்லை. ஆனால் ஹோண்டா டூவீலர் நிறுவனத்தின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படுவது குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க
இதன்படி ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனமானது, உற்பத்தி பணிகளை அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. அந்த நிறுவனத்தின் 4 ஆலைகளிலும், இரு கட்டங்களாக உற்பத்தி தொடங்கப்படவுள்ளது. இதன்படி கர்நாடக மாநிலம் நரசபுராவில் உள்ள பிளாண்ட்டில் வரும் மே 25ம் தேதி முதல் உற்பத்தி பணிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளன.
இதுதான் ஹோண்டா டூவீலர் நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையாகும். இதை தொடர்ந்து எஞ்சிய 3 தொழிற்சாலைகளிலும், வரும் ஜூன் மாத முதல் வாரத்தில் மீண்டும் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும். ஹோண்டா நிறுவனம் இரு சக்கர வாகன உற்பத்தி பணிகளை படிப்படியாக தொடங்க முடிவு செய்திருக்கிறது.
MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!
எனினும் மற்ற முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவை, கடந்த மே மாத முதல் வாரத்திலேயே வாகன உற்பத்தி பணிகளை மீண்டும் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி அவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.
ஹோண்டா நிறுவனம் இன்னும் உற்பத்தி பணிகளை தொடங்காமல் இருந்தாலும், அந்நிறுவனத்தின் டீலர்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கி விட்டனர். தற்போதைய நிலையில் 60 சதவீதத்திற்கும் மேலான ஹோண்டா டீலர்கள் தங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்ததை போல் தற்போது டூவீலர்களை வாங்குவதற்கான என்கொய்ரிகள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் என்கொய்ரிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கையில் ஹோண்டா உள்ளது.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350