சானிட்டைசர்களால் இப்படி ஒரு ஆபத்தா..? நீங்க துளியளவும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க... வீடியோ!
கிருமிகளை அழிப்பதற்கு உதவும் சானிட்டைசர்கள் நாம் எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. மாஸ்க், முகுமூடி அணிவது மற்றும் சானிட்டைசர்களை (கிருமி நாசினிகள்) பயன்படுத்துவது என பல பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவையே உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவிடமிருந்து பாதுகாக்க தற்காலிக வழி. இதில், சானிட்டைசர்களின் பங்கு சற்றே கூடுதலாக இருக்கின்றது. ஆம், வைரசை பரவாமல் தடுப்பது மட்டுமின்றி அடியோடு அழிக்கும் திறனை சானிட்டைசர்கள் கொண்டிருக்கின்றன.

எனவேதான் கிருமி நாசினிகளை (சானிட்டைசர்) மனிதர்களுக்கு மட்டுமின்றி பொது இடங்கள் மற்றும் வாகனங்கள் மீதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் நுழையும் வாகனங்கள் மீது அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் சானிட்டைசர்கள் ஸ்பிரேக்களைப் பயன்படுத்துகின்றன.

இது, வாகனத்தின்மீது படர்ந்திருக்கும் கிருமிகள் அனைத்தையும் அடியோடு அழிக்க உதவும். ஆனால், இந்த நடவடிக்கை ஒரு சில நேரங்களில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. ஆம், சானிட்டைசர்கள் விரைவில் தீ பிடிக்கும் அதிக எரி திறன் கொண்ட ஆல்கஹால்களைக் கொண்டிருக்கின்றன.

இவை, சூடான அல்லது நெருப்பு பொறி வெளிப்படும் இடங்களில் தெளிக்கப்படும்போது எதிர்பாராத தீ விபத்தை ஏற்படுத்தி விடும். இதனை உணர்த்துகின்ற வகையிலான ஓர் சம்பவம்தான் தற்போது அரங்கேறியிருக்கின்றது.
இந்த சம்பவம் எங்கு நடைபெற்றிருக்கின்றது என்பது பற்றிய முழுமையான தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும், சானிட்டைசர்களின் ஆபத்தைப் பற்றி விளக்கும் வகையில் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கின்றது.
வீடியோவில், முன்னதாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்று செல்கின்றது. அதன்மீது பணியாளர்கள் இருவர் வலது, இடது என இரு பக்கங்களிலும் கிருமி நாசினிகளைத் தெளிக்கும் விதமாக ஸ்பிரே செய்கின்றனர்.

அதைத்தொடர்ந்து, சானிட்டைசிங்கிற்காக காத்திருந்தக பஜாஜ் பைக் ஒன்றும் அவர்கள் முன்னேச் சென்று நிற்கின்றது. இதைத்தொடர்ந்து, பணியாளர்கள் பைக்கின் முன் வீல் மற்றும் பின் வீல்களில் கிருமி நாசினிகளைத் தெளிக்கின்றனர்.
அப்போது, கிருமி நாசினி எஞ்ஜின் மற்றும் சைலென்சர் பகுதியில் பட்டபோது திடீரென தீப்பிழம்பு உருவாகத் தொடங்கியது.

அது வாகன ஓட்டியின் மீதும் படர்ந்தது. இதனால் அதிர்ந்துபோன பணியாளர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டி தலை தெறிக்க அங்கிகருந்து ஓட ஆரம்பித்தனர். அதில், ஒருவர் மட்டும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் திரும்பிய மற்றொருவர் பைக்கை தீயில் சிக்க விடாமல் நகர்த்திவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தீயணைப்புகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த தீயணைப்பான் வேலை செய்யவில்லை. இது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இருப்பினும், தீ பெரியளவில் பரவாமல் இருந்ததால், அதனை விரைவில் சக பணியாளர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தின் மூலம் இரு விதமான பாடங்கள் நமக்கு கிடைத்துள்ளன. அதாவது, திறந்த நிலையில் இருக்கும் வாகனங்களின் எஞ்ஜின் பகுதியில் சேனிட்டைசர்களை தெளிக்கக்கூடாது என்பது மற்றும் சானிட்டைசர்களை பயன்படுத்தும் ஊழியர்கள் எப்போதும் தயாராக தீயணைப்பு கருவிகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்பதும்ஆகும்.

பல இடங்களில் கிருமிகளை அழிக்கும் பணி மட்டுமே மும்பரமாகச் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், அதனால் ஏற்படும் பின் விளைவுகளைக் கையாள்வதற்கான ஒரு வழியையும் அவர்கள் கையாள்வதில்லை. தற்போதைய சம்பவத்தில் சேதம் பெரியளவில் இல்லை என்றால் இது ஓர் மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.
தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது. இதனால், சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் அதிக வெப்பத்தைக் கொண்டதாக இருக்கின்றன. இதுமட்டுமின்றி, இது வழக்கமான எஞ்ஜின் வெப்பத்தைக் காட்டிலும் கூடுதல் வெப்பத்தை வெளிப்படுத்த வைக்கின்றது. இது பல மடங்கு அதிகம் என்பதால் எளிதில் தீ பிடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

அதிலும், சானிட்டைசர்கள் அதிக எரி திறன் கொண்டவை என்பதால் வாகனத்தின் அதிக சூடான பகுதியில் படும்போது எளிதில் தீயை ஏற்படுத்திவிடுகின்து. இதனை விளக்கும் வகையில் இதற்கு முன்பாக பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இருப்பினும், பலர் பாதுகாப்பற்ற முறையில் சானிட்டைசர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








