மீளா விடைபெறும் ஹீரோ முதல் தலைமுறை பிளஷர் ஸ்கூட்டர்..? சோகத்தில் மூழ்க வைத்த அறிவிப்பு!
ஹீரோ நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டர்களில் ஒன்றான முதல் தலைமுறை பிளஷர் மாடல் இந்திய சந்தையை விட்டு வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக ஹீரோ நிறுவனம் போற்றப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இருசக்கர வாகனங்களை தயாரித்தல் மற்றும் விற்பனைச் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தது.

இப்படியான கூட்டணியின் மூலம் தயாரிக்கப்பட்டதுதான் ஹீரோ பிளஷர் ஸ்கூட்டர்கள். இதனை இந்நிறுவனங்கள் 2006ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு முதல் முறையாக அறிமுகம் செய்தது.
அப்போது ஹீரோ ஹோண்டா பிளஷர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் இரு நிறுவனங்களின் பிரிவை அடுத்து ஹீரோ பிளஷர் என்ற பெயரில் விற்பனைச் செய்யப்பட்டது. ஆனால், இது தற்போது நீண்ட நாட்களுக்கு நீடிக்கப்போவதில்லை.
ஆம், விரைவில் இந்த பிளஷர் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையை விட்டு வெளியேற்றப்பட இருக்கின்றன. இதுகுறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா ஆங்கில தளம் உறுதி செய்துள்ளது.

மேலும், இந்த தகவலை உறுதிச் செய்கின்ற வகையில், ஹீரோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தின் ஸ்கூட்டர்களின் பட்டியலில் இருந்து முதல் தலைமுறை பிளஷர் இருசக்கர வாகனத்தின் பெயர் மற்றும் புகைப்படங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

ஹீரோவின் இந்த அதிரடி நடவடிக்கை அதன் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனென்றால், இந்த ஸ்கூட்டர் இந்தியர்களின் பயன்பாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக பங்களித்து வருகின்றது. குறிப்பாக, பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று.

மேலும், 2000ம் ஆண்டுகளில் விற்பனைக்கு கிடைத்த டிவிஎஸ் ஸ்கூட்டி, கைனடிக் ஜிங் மற்றும் பஜாஜ் ஸ்பிரிட் ஆகிய ஸ்கூட்டர்களைக் காட்டிலும் அதிக திறன் கொண்ட ஸ்கூட்டராக இது காட்சியளித்து. இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் இந்த ஸ்கூட்டர் மிக நீண்ட காலமாக இந்திய சந்தையில் தாக்கு பிடித்து வந்தது. ஆனால், 2020ம் ஆண்டு இந்த ஸ்கூட்டரின் விற்பனைக்கு முற்று புள்ளி வைத்துள்ளது.

அதேசமயம், முதல் தலைமுறை பிளஷர் ஸ்கூட்டர் வெளியேற்றப்பட்டாலும் பிளஷர் பிராண்டின் ப்ளஸ் வேரியண்ட்டின் விற்பனை இந்தியாவில் தொடரும் என தெரிகின்றது. தற்போது வெளியேற்றம் செய்யப்பட்டிருக்கும் ஹீரோ பிளஷர் ஸ்கூட்டரில் 110 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இது விற்பனைக்கு களமிறங்கிய புதியில் 100 சிசி ரகத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு புதுப்பித்தலின்போதும் 102சிசி என அடுத்தடுத்த இடத்தை உயர்திறனை அது பெற்றது.

தற்போதைய ஹீரோ பிளஷர் ஸ்கூட்டரில் பயனபடுத்தப்படும் 110.9 சிசி எஞ்ஜினைதான் ஹீரோ அதன் டூயட் மற்றும் ஸ்டாண்டர்டு மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தி வருகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.1 எச்பி மற்றும் 8.7 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் இந்த ஸ்கூட்டர்கள் பெண்களை மட்டம் கவருகின்ற நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், அடுத்தடுத்த கால கட்டத்தில் புது வடிவமைப்பை வழங்கும்போது இரு பாலரையும் கவரும் நோக்கில் டிசைன் தாத்பரியங்கள் வழங்கப்பட்டன.
அந்தவகையில், லேசான ரெட்ரோ ஸ்டைல், சற்று தாழ்ந்த இருக்கை அமைப்பு உள்ளிட்ட டிசைன்கள் அதில் பயன்படுத்தப்பட்டன.


Click it and Unblock the Notifications








